search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது.

    அதையொட்டி காலை 11 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 1 மணியளவில் மகா தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் தேர் கடாட்சம் எனும் தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து 5 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு சென்றடைதல் நடந்தது. பின்னர் 6 மணியளவில் கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சுவாமியின் பரிவட்டத்தைக்கொண்டு கொடியசைக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது. அதன்பிறகு தீபாராதனை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
    Next Story
    ×