search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுரண்டை முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
    X
    சுரண்டை முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    முப்பிடாதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
    நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் முப்பிடாதி அம்மன் வழிபாட்டு குழுவினர் சார்பில் சிறப்பு பஜனை, 1008 திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை கச்சேரி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதிஉலா வருதல் ஆகியன நடந்தது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர் முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கீழரதவீதி, செங்கோட்டை ரோடு வழியாக சிவகாமசுந்தரி-சிவகுருநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்து, தேர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    Next Story
    ×