search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்ப உற்சவம்

    நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 4-வது திருநாளான 15-ந் தேதியன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 21-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    11-வது நாளான நேற்று முன்தினம் மதியம் நெல்லையப்பர் கோவில் சவுந்திரசபையில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது.

    விழாவின் இறுதியாக தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அப்போது சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் தெப்பம் சுற்றி வராமல், பக்தர்களுக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    Next Story
    ×