என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவில் தைப்பூச தெப்ப உற்சவம்
Byமாலை மலர்24 Jan 2019 3:52 AM GMT (Updated: 24 Jan 2019 3:52 AM GMT)
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 4-வது திருநாளான 15-ந் தேதியன்று நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 21-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
11-வது நாளான நேற்று முன்தினம் மதியம் நெல்லையப்பர் கோவில் சவுந்திரசபையில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது.
விழாவின் இறுதியாக தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அப்போது சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் தெப்பம் சுற்றி வராமல், பக்தர்களுக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11-வது நாளான நேற்று முன்தினம் மதியம் நெல்லையப்பர் கோவில் சவுந்திரசபையில் நடராஜர் திருநடன காட்சி நடைபெற்றது.
விழாவின் இறுதியாக தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தெப்பக்குளத்துக்கு வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அப்போது சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் தெப்பம் சுற்றி வராமல், பக்தர்களுக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X