என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புராண கதாபாத்திரங்கள்
Byமாலை மலர்15 Nov 2018 7:26 AM GMT
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
புராண கதாபாத்திரங்கள் :
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..
ஏகலைவன் :
மகாபாரதத்தில் வேடுவர்களின் தலைவனாக இருந்தவர் ஹிரனியதனுஷ். இவரது மகன் தான் ஏகலைவன். இவன் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறான். வேடவர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு, குருவில் சிறந்தவரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர துரோணர் மறுத்து விடுகிறார். இதனால் துரோணரின் உருவ சிலையை செய்து, அவரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை பயில்கிறான், ஏகலைவன். அதன் மூலம் வில்வித்தையில் சிறந்தவராக மகாபாரதம் குறிப்பிடும் அர்ச்சுனனைவிட சிறப்பானவனாக திகழ்கிறான். இதனை அறிந்த அர்ச்சுனன், அதுபற்றி துரோணரிடம் கூறுகிறான்.
துரோணரோ, ஏகலைவனை அழைத்து, குரு தட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலைக் கேட்கிறார். சற்றும் யோசிக்காத ஏகலைவன், தன் குருவிற்காக தன் கட்டை விரலையே காணிக்கையாக செலுத்தி, குரு பக்தியில் சிறந்து விளங்கினான் என்கிறது மகாபாரதக் கதை.
காந்தாரி :
அஸ்தினாபுரத்து அரசன் திருதிராஷ்டிரரின் மனைவி தான் காந்தாரி. கவுரவர்கள் என்று அழைக்கப்பட்ட துரியோதனன் முதலான 100 பேரையும் பெற்றெடுத்தவள் காந்தாரி. திருதிராஷ்டிரர் பார்வையற்றவர் என்பதால், காந்தாரியும் கணவரின் இருள் உலக துயரை பகிர்ந்து கொள்வதற்காக, மணம் முடிந்த காலம் முதல் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தியவள்.
சனுரா :
மதுராபுரியை ஆண்டு வந்தவன் கம்சன். இவன் கிருஷ்ணரை பெற்றெடுத்த தேவகியின் சகோதரன். தங்கையின் மகனால் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பலவித முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை, மதுராபுரிக்கு அழைத்து மல்யுத்தம் செய்து கொல்ல முடிவு செய்தான், கம்சன். கிருஷ்ணரையும், பலராமரையும் மல்யுத்தம் புரிந்து கொல்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் சனுரா. இவனுக்கு முஷ்டிகன் என்ற சகோதரன் உண்டு. இருவரும் மாபெரும் மல்யுத்த வீரர்கள். ஒரு அரங்கத்தில் சனுரா கிருஷ்ணரிடம் சவால் விட, அந்த ஆபத்தான சண்டையில் கிருஷ்ணர் சனுரானையும், பலராமர் முஷ்டிகனையும் வீழ்த்தினார்.
பகீரதன் :
பகீரதன் சூரிய வம்சத்து அரசர். இவர்தான் கங்கையை ஆகாயத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. இவர் தனது முன்னோர் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான வழியைத் தேடினார். அதற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை, பூமிக்கு கொண்டு வந்து சிவபெருமானை அபிஷேகித்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர கடுமையாக தவம் இருந்தார். இதையடுத்து சிவபெருமானின் அருளால் கங்கை, பூமியை வந்தடைந்தது. அதன் மூலம் பகீரதனின் முன்னோர்கள் முக்தி அடைந்தனர். கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்த காரணத்தால்தான் அவரது பெயர் ‘பகீரதன்’ என்று ஆனது.
சிந்தாமணி :
அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று தான் சிந்தாமணி என்ற ஒருவகை கல். அந்த அற்புதக் கல்லை, சிறந்த முனிவராக திகழ்ந்த கபில முனிவரிடம் அளித்தனர். அந்த முனிவர் சிந்தாமணி கல்லை, இளவரசர் கனராஜனுக்கு ஆடம்பர விருந்து அளிப்பதற்கு உபயோகித்தார். சிந்தாமணி செய்யும் அற்புதத்தை கண்டு வியந்த இளவரசன், அதை அபகரித்து சென்று விட்டான். எனவே அந்த கல்லை மீட்டு தருமாறு விநாயகப்பெருமானிடம் முனிவர் வேண்டினார். அவர் இளவரசனுடன் போரிட்டு, சிந்தாமணி கல்லை மீட்டார்.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..
ஏகலைவன் :
மகாபாரதத்தில் வேடுவர்களின் தலைவனாக இருந்தவர் ஹிரனியதனுஷ். இவரது மகன் தான் ஏகலைவன். இவன் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறான். வேடவர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு, குருவில் சிறந்தவரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர துரோணர் மறுத்து விடுகிறார். இதனால் துரோணரின் உருவ சிலையை செய்து, அவரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை பயில்கிறான், ஏகலைவன். அதன் மூலம் வில்வித்தையில் சிறந்தவராக மகாபாரதம் குறிப்பிடும் அர்ச்சுனனைவிட சிறப்பானவனாக திகழ்கிறான். இதனை அறிந்த அர்ச்சுனன், அதுபற்றி துரோணரிடம் கூறுகிறான்.
துரோணரோ, ஏகலைவனை அழைத்து, குரு தட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலைக் கேட்கிறார். சற்றும் யோசிக்காத ஏகலைவன், தன் குருவிற்காக தன் கட்டை விரலையே காணிக்கையாக செலுத்தி, குரு பக்தியில் சிறந்து விளங்கினான் என்கிறது மகாபாரதக் கதை.
காந்தாரி :
அஸ்தினாபுரத்து அரசன் திருதிராஷ்டிரரின் மனைவி தான் காந்தாரி. கவுரவர்கள் என்று அழைக்கப்பட்ட துரியோதனன் முதலான 100 பேரையும் பெற்றெடுத்தவள் காந்தாரி. திருதிராஷ்டிரர் பார்வையற்றவர் என்பதால், காந்தாரியும் கணவரின் இருள் உலக துயரை பகிர்ந்து கொள்வதற்காக, மணம் முடிந்த காலம் முதல் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தியவள்.
சனுரா :
மதுராபுரியை ஆண்டு வந்தவன் கம்சன். இவன் கிருஷ்ணரை பெற்றெடுத்த தேவகியின் சகோதரன். தங்கையின் மகனால் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பலவித முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை, மதுராபுரிக்கு அழைத்து மல்யுத்தம் செய்து கொல்ல முடிவு செய்தான், கம்சன். கிருஷ்ணரையும், பலராமரையும் மல்யுத்தம் புரிந்து கொல்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் சனுரா. இவனுக்கு முஷ்டிகன் என்ற சகோதரன் உண்டு. இருவரும் மாபெரும் மல்யுத்த வீரர்கள். ஒரு அரங்கத்தில் சனுரா கிருஷ்ணரிடம் சவால் விட, அந்த ஆபத்தான சண்டையில் கிருஷ்ணர் சனுரானையும், பலராமர் முஷ்டிகனையும் வீழ்த்தினார்.
பகீரதன் :
பகீரதன் சூரிய வம்சத்து அரசர். இவர்தான் கங்கையை ஆகாயத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. இவர் தனது முன்னோர் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான வழியைத் தேடினார். அதற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை, பூமிக்கு கொண்டு வந்து சிவபெருமானை அபிஷேகித்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர கடுமையாக தவம் இருந்தார். இதையடுத்து சிவபெருமானின் அருளால் கங்கை, பூமியை வந்தடைந்தது. அதன் மூலம் பகீரதனின் முன்னோர்கள் முக்தி அடைந்தனர். கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்த காரணத்தால்தான் அவரது பெயர் ‘பகீரதன்’ என்று ஆனது.
சிந்தாமணி :
அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று தான் சிந்தாமணி என்ற ஒருவகை கல். அந்த அற்புதக் கல்லை, சிறந்த முனிவராக திகழ்ந்த கபில முனிவரிடம் அளித்தனர். அந்த முனிவர் சிந்தாமணி கல்லை, இளவரசர் கனராஜனுக்கு ஆடம்பர விருந்து அளிப்பதற்கு உபயோகித்தார். சிந்தாமணி செய்யும் அற்புதத்தை கண்டு வியந்த இளவரசன், அதை அபகரித்து சென்று விட்டான். எனவே அந்த கல்லை மீட்டு தருமாறு விநாயகப்பெருமானிடம் முனிவர் வேண்டினார். அவர் இளவரசனுடன் போரிட்டு, சிந்தாமணி கல்லை மீட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X