search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legendary characters"

    பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

    இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

    உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    நடராஜர்

    அண்டம் முழுவதும் நடனத்துக்காக போற்றி புகழப்படுபவர் நடராஜர். சிவபெருமான் 64 வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவமாக இது போற்றப்படுகிறது. இந்த கோலத்தில் நடனமாடும் போது உலக உயிர்கள் அனைத்தும் அழிந்து அடுத்த புது உலகம் தோன்றும். அப்ஸமார புருஷா என்னும் குள்ளனை, காலில் விழச் செய்து, அவன் ஆணவத்தை அழிக்க, அவன் மீது நிற்பது போல் நடராஜர் தோற்றம் இருக்கும். நடராஜரின் தோற்றமான உலக உயிர்களின் உருவாக்கத்தை உணர்த்தும் விதத்தில் இருப்பதாக விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    மந்திரா

    பிரபஞ்சத்தின் தலைமை சிற்பியாக புராணங்கள் விஸ்வகர்மாவை சித்தரிக்கின்றன. இவருடைய மனைவிகளில் ஒருவர்தான் மந்திரா. இவர்களது மகன் நளன், ராமாயண காவியத்தின் போது, வானர வீரர்களில் ஒருவனாக இருந்து, ராமபிரானுக்கு உதவி செய்தவன். முனிவர் ஒருவரிடம் பெற்ற சாபத்தின் நளனுக்கு வரமாக அமைந்து விட்டது. அதாவது எதை நீரில் தூக்கிப் போட்டாலும், அது மூழ்காமல் தண்ணீருக்கு மேலே மிதக்கும் என்பது நளனுக்கு கிடைத்த சாபம். அதுதான் ராமாயண யுத்தத்திற்காக இலங்கைக்குச் செல்ல கற்களைக் கொண்டு பாலம் அமைக்க நளனுக்கு உதவிகரமாக இருந்தது. அந்த சிறப்பு மிக்க பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் தான் மந்திரா.

    பரீட்ஷித்

    மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் ஐந்து பேரில் அர்ச்சுனனின் பேரன் தான் பரீட்ஷித். இவன் அபிமன்யுவின் மகன். மகாபாரதப் போரின் போது, பரீட்ஷித் தாயின் கருவில் வளர்ந்து வந்தான். அப்போது அஸ்வத்தாமன் ஆயுதத்தை ஏவி, தாயின் வயிற்றில் அடித்தான். இதனால் பரீட்ஷித் பிறக்கும் போதே இறந்து பிறந்தான். ஆனால் கிருஷ்ண பகவானின் அருளால், அவனுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவனே பின்னாளில் அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்தான்.

    பரீட்ஷித், ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அங்கு ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரை பரீட்ஷித் பல முறை வணங்கியும், அவர் தியானத்தில் இருந்ததால் அவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட பரீட்ஷித், முனிவரின் மீது பாம்பு ஒன்றை மாலை போல் போட்டு விட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கு வந்த முனிவரின் மகன், தன் தந்தையின் மீது பாம்பை போட்டவன், 7 நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் என்று சாபமிட்டார். அதன்படியே பரீட்ஷித் பாம்பு தீண்டி இறந்தான்.

    கிருதயுகம்

    உலகின் நான்கு யுகங்களில் முதல் யுகம் கிருதயுகம். இது 17 லட்சத்து 28 ஆயிரம் வருடங்களைக் கொண்டதாகும். கிருத யுகத்தை ‘சத்ய யுகம்’ என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இந்த யுகத்தில் வாழும் மக்கள் அனைவருமே நேர்மையானவர்களாகவும், தங்கள் கடமையில் இருந்து தவறாதவர்களாகவும் இருப்பார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    பாசுபதம்

    சிவபெருமானின் சக்தி மிகுந்த ஆயுதமாகும். எப் பொழுது தர்மம் அழிகின்றதோ அதை மீட்க இதை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து படைப்புகளையும் அழிக்கக் கூடியது. பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். அவனது தவவலிமையால் சிவன் அவன் வேண்டும் வரத்தை கேட்குமாறு கூற, அவன் சிவனிடமிருந்து பாசுபதத்தை பெற்றுச் சென்றான்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    நகுலன்


    பாண்டவர்களில் நான்காவதாக பிறந்தவன் நகுலன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி குமாரர்களின் அம்சமாக பிறந்த இரட்டையர்களில் ஒருவன். இவன் வில் எய்தல் மற்றும் வாள் சண்டையில் சிறப்பு பெற்றவன். பாண்டவர்கள் 5 பேரில் மிகவும் அழகானவனாக நகுலன் கருதப்படுகிறான். இவன் வனவாசத்தின் இறுதி காலத்தில், விரத தேசத்தில் இருந்தான். அப்போது அந்த நாட்டு மன்னனின் குதிரைகளை மேற்பார்வையிடுபவனாக பணியாற்றினான். குதிரைகளோடு பேசும் திறமை படைத்தவனாக இருந்தான். மகாபாரத யுத்தத்தின் போது, கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகியோரை கொன்றான். கர்ணனுடன் போரிட்டபோது, அவனுக்கு ஈடுகொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இருந்தாலும் நகுலனின் தேரையும், படைகளையும் சிதறடித்தான் கர்ணன்.

    பாண்டவர்கள்

    அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த பாண்டுவிற்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவருக்கும் பல தேவர்களின் அம்சமாக ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். பாண்டுவின் மகன்கள் என்பதால் இவர்கள் 5 பேரும் ‘பாண்டவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களின் மூத்தவர் யுதிஷ்டிரர், அடுத்ததாக பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன். பாண்டவர்களுடன், கவுரவர்களான துரியோதனன் உள்ளிட்ட 100 சகோதரர்களுக்கும் பொறாமை உணர்வு ஏற்பட்டது. அதன் காரணமாகவே மகாபாரத யுத்தம் உருவானது. யுத்தத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் இருவரின் தரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டன.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    மண்டோதரி

    மாயாசுரன் என்ற மயன் பாதாள உலகில் உள்ள அசுரர்களுக்கான கட்டிடங்களை வடிவமைப்பவன். மிகப்பெரும் அரசனும் ஆவான். அவனது மகள் தான் மண்டோதரி. இவளை இலங்கையை ஆட்சி செய்து வந்த அசுரர்களின் தலைவனான ராவணன் மணம் முடித்துக் கொண்டான். மண்டோதரி பேரழகு வாய்ந்தவள் என்று ராமாயண காவியம் எடுத்துரைக்கிறது. அவள் எவ்வளவு அழகு வாய்ந்தவள் என்றால், ஒரு முறை அனுமன், சீதை இலங்கையில் தான் இருக்கிறாளா என்று பார்த்துவருவதற்காக வந்தார்.

    அப்போது முதலில் அவர் பார்த்தது மண்டோதரியை தான். அவளின் அழகை வைத்து, அவள் தான் சீதை என்று முதலில் நினைத்தார் அனுமன். பின்னர் தான் அவள் ராவணனின் மனைவி என்பது தெரியவந்தது. மண்டோதரி, கடவுள் மீது அதீத நம்பிக்கையும், பக்தியும் கொண்டவள்.. சீதையை மீண்டும் ராமனிடம் அனுப்பி விடும்படி, அவள் பலமுறை ராவணனிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டாள். மண்டோதரி என்பதற்கு ‘மெல்லிய வயிறுடையவள்’ என்று பொருள்.



    மனுஸ்மிரிதி

    மனு என்பவர் எழுதிய நூலின் பெயரே ‘மனுஸ்மிரிதி’ ஆகும். இந்த நூலானது 12 பாகங்களைக் கொண்டது. கி.மு. 500-ல் எழுதப்பட்டதாக அறியப்படும் இந்த நூல், பல சாஸ்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்து மதத்தின் விதிகள் அனைத்தும் இந்த ‘மனுஸ்மிரிதி’ நூலில் குறிப்பிடப்பட்டு இருப்பவையே என்று சொல்கிறார்கள்.

    மன்மதன்

    கரும்பை வில்லாகவும், தேனீக்களை நாணாகவும், மணம் நிறைந்த மலர்களை அம்பாகவும் கொண்ட காதல் கடவுள் தான் மன்மதன். தாரகன் என்னும் அரக்கன் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். சிவபெருமானுக்கு பிறக்கும் மகனால் மட்டுமே அவனை அழிக்க முடியும். எனவே சிவன்- பார்வதியை மணந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தையே தாரகனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் எண்ணினர். அதனால் தவத்தில் இருந்த ஈசனை விழிப்படையச் செய்ய, மன்மதனைக் கொண்டு காதல் அம்பு வீசச் செய்தனர். ஆனால் தவத்தை கலைத்த குற்றத்திற்காக, தனது நெற்றிக்கண்ணை திறந்து, மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். பின்னர் ரதிதேவியின் வேண்டுதல்படி, அவள் கண்களுக்கு மட்டுமே தென்படுவான் என்ற நிபந்தனையுடன், மன்மதனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

    மகிஷன்

    அசுரர்களின் அரசன். எருமை தலையைக் கொண்டவன் என்பதால் அவனுக்கு ‘மகிஷன்’ என்று பெயர் வந்தது. தண்டாயுதத்தை ஆயுதமாகக் கொண்டவன். மகிஷன் மூவுலகையும் ஆண்டு வந்தான். இறுதியில் தேவர்களுடனும் போர் புரிந்தான். அந்த போரில் நூற்றுக்கணக்கான தேவர்கள் அழிந்தனர். இறுதியில் மகிஷன் தேவலோகத்தையும் கைப்பற்றி, எஞ்சியிருந்த தேவர்களையும் கைதிகளாக சிறையில் அடைத்தான். ஆண்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை மகிஷன் பெற்றிருந்தான். எனவே விஷ்ணு ஒரு தேவியை உருவாக்கி, அந்த தேவிக்கு எல்லா தேவர்களின் சக்தியையும் வழங்கினார். இதையடுத்து அந்த தேவியானவள், மகிஷனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். இதனால் அவள் ‘மகிஷாசுரமர்த்தினி’ என்று அழைக்கப்பட்டாள்.
    ராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கைகேயி

    அயோத்தி மன்னனான தசரதரின் மனைவியர்களில் ஒருத்தி கைகேயி. இவள் பரதனின் தாய் ஆவாள். ஆரம்ப காலத்தில் கவுசல்யாவின் மகனான ராமனையும் தன் பிள்ளைப் போலவே பாவித்து வந்த கைகேயியின் மனதை, மந்தரை என்பவள் மாற்றினாள். அதன் காரணமாக, தசரதன் தனக்கு தருவதாக ஏற்கனவே சொல்லியிருந்த 2 வரங்களை இப்போது சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள், கைகேயி. அதன்படி ஒரு வரத்தால், ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு வரத்தால் தன்னுடைய மகன் பரதன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் தசரதனிடம் வரம் பெற்றாள். இதனால் தான் ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டி வந்தது.

    கத்ரு

    காசியப முனிவரின் மனைவியில் ஒருவள் கத்ரு. இவள் ஒரு முறை தன்னுடைய கணவரிடம், சக்திகள் படைத்த ஆயிரம் பிள்ளைகள் தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டாள். அதன்படி அவளுக்கு சேஷநாகா, வாசுகி, காலியா உள்ளிட்ட 1000 நாகங்கள் பிறந்தன. இவளின் சகோதரியே, கருட பகவானின் தாய் வினதை. கருடனின் தாயை, கத்ரு அடிமையாக வைத்திருந்த காரணத்தால், தாயை விடுவிக்க தேவேந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தார் கருட பகவான். தாயை அடிமையில் இருந்து மீட்டெடுத்ததும், மீண்டும் அமிர்த கலசத்தை தேவேந்திரனிடமே ஒப்படைத்து விட்டார் கருடன். இதனால் நாகர்களுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது என்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

    கிஷ்கிந்தை

    வானரங்களின் தலைமை இடமாக இருந்த பகுதியே கிஷ்கிந்தை என்று ராமாயணம் குறிப்பிடுகிறது. இந்த இடத்தை பலம் பொருந்திய வாலி அரசாட்சி செய்து வந்தான். ஒரு சில காரணங்களால் வாலிக்கும், அவரது தம்பி சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. இதனால் சுக்ரீவனை கிஷ்கிந்தையில் இருந்து விரட்டி விட்டதோடு அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான் வாலி. இந்த நிலையில் சீதையை மீட்பதற்காக சுக்ரீவனின் உதவியை நாடி வந்த ராமன், அவனுக்காக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்றார். பின்னர் சுக்ரீவனை, கிஷ்கிந்தையின் அரசனாக்கினார். வாலியின் முன்பாக நின்று அவனை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பலத்தில் பாதி, வாலியை சென்றடையும் என்ற வரம் காரணமாக, ராமன் மறைந்திருந்து அவனைத் தாக்கினார் என்கிறது ராமாயண காவியம்.

    காதம்பரி

    உஜ்ஜையினி நகரத்து அரசன் சந்திரபீடன், கந்தர்வப் பெண்ணான காதம்பரி என்பவளை காதல் திருமணம் செய்து கொண்டான். இந்த வரலாற்றை இலக்கியமாக சொல்லிய நூல் தான் ‘காதம்பரி.’ இந்த நூலை ஹர்சவர்த்தன் என்ற அரசனின் அவைப் புலவராக இருந்த பாணபட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலானது ‘பூர்வ பாகம்’, ‘உத்தர பாகம்’ என இரு பகுதிகளைக் கொண்டது.

    கபந்தன்

    ராமனும், லட்சுமணனும் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கால்களும், தலையும் இல்லாத கோர தோற்றம் கொண்ட கபந்தன் என்ற அரக்கன் அவர்களை தடுத்தான். உடனே ராமனும், லட்சுமணனும் அம்பு எய்து, அந்த அரக்கனுக்கு கைகள் இல்லாமல் செய்தனர். பின்னர் அவனது உடலை எரித்தனர். அந்த சாம்பலில் இருந்து சாப விமோசனம் பெற்று ஒரு அழகிய உருவம் கொண்ட கந்தர்வன் வெளிப்பட்டான். தேவலோகத்தில் இசை பாடகனாக இருந்த கந்தர்வன், இந்திரனின் சாபத்தால் இவ்வாறு ஆகியிருந்தான். விமோசனம் பெற்ற அந்த கந்தர்வன் தான், ராவணனிடம் இருந்து சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடும்படி ராமனுக்கும் லட்சுமணனுக்கும் ஆலோசனை வழங்கினான்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
    கல்கி:

    புராணங்களின் கூற்றுப்படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் இந்த கல்கி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை கலியுகத்தின் இறுதியில், தீய எண்ணங்களும், தீய சக்திகளும் மக்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் போது, அதை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் அவதாரம் என்று கூறப்பட்டிருக்கிறது. வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடன் கல்கியாக விஷ்ணு தோன்றுவார். கல்கி அவதாரம் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் போது, கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    காளிதாசர் :

    சமஸ்கிருத இலக்கியங்களில் சிறந்து விளங்கிய புலவர், காளிதாசர் ஆவார். இவர் நாடக கவிதை நடையில் எழுதிய ‘குமாரசம்பவம்’ என்னும் நூல் காவிய கவிதை களைக் கொண்டது. இந்த நூல் சிவ- சக்தி அருளால் உருவான குமரன் பிறப்பின் வரலாற்றைப் பற்றி விளக்குகிறது. இது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இது தவிர ரகுவம்சத்தில் பிறந்த ராமனின் வரலாற்றையும், அவர் அயோத்தியின் அரசராக இருந்த கதையையும் நூலாக்கியுள்ளார். ‘மேகதூது’ என்னும் கற்பனை படைப்பில், காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள், மேகங்களை தூது அனுப்புவதாக கூறியிருக்கும் நயம் சிறப்பு வாய்ந்ததாகும். ‘அபிங்ஜனசகுந்தலா’, ‘மாலவிகாக்னிமித்ரா’, ‘விக்ரமோர்வசியா’ போன்றவை இவரின் மேலும் சிறந்த படைப்புகள். பேரரசர் விக்ரமாதித்யாவின் அரசவையை அலங்கரித்த புலவர்களில் ஒருவர் காளிதாசர் என்று சொல்லப்படுகிறது.

    காலிங்கன் :

    கடலில் வசித்து வந்த காலிங்கன் என்ற ஐந்து தலை நாகம், கருடனுக்கு பயந்து யமுனை நதியில் தஞ்சம் அடைந்தது. காலிங்கன் கொடிய விஷம் கொண்ட நாகம் என்பதால், அதன் மூச்சுக் காற்றுபட்டு, யமுனை நதி முழுவதும் விஷமாகிப் போனது. இதனால் நதியில் தண்ணீர் அருந்தும் ஜீவராசிகள் மடிந்தன. யமுனை நதியின் கரையோரத்தில் இருந்த பசுமையான மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் கருகிப் போயின.

    பிருந்தாவன மக்கள் இதனால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். பாலகனாக இருந்த கிருஷ்ணர், இதனையெல்லாம் அறிந்து யமுனை நதிக்குள் சென்று காலிங்கனுடன் போரிட்டு அடக்கி, அதன் தலைகள் மீது நடனம் புரிந்தார். பின்னர் காலிங்கனை கடலுக்குச் செல்லும்படி கூறினார். கருடனுக்கு பயந்த காலிங்கனிடம், “என்னுடைய காலடி தடம் உன் தலையில் இருப்பதால் கருடனால் உனக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். இதையடுத்து காலிங்கன் யமுனை நதியில் இருந்து கடலுக்கு சென்றது.

    கயிலாயம் :

    சைவ சமயத்தின் இறைவனாக இருக்கும் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் வாசம் செய்வதாக நம்பப்படும் இடம் கயிலாயம் எனப்படும் கயிலை மலை. இது இமய மலையில் வடக்கு பகுதியில் உள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இந்துக்களின் புனித தலங்களில் முதன்மையானதாக கயிலாயம் போற்றப்படுகிறது. ஆன்மாக்கள் மனித உடலை விட்டு பிரிந்ததும் சென்றடையும் இடம் கயிலாயம் என்றும் சொல்வார்கள். பகீரதன் என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்கள் நன்மை அடைவதற்காக, கங்கையை பூமிக்கு வரவழைக்க சிவபெருமானை வணங்கினான். அதன் மூலம் சிவபெருமான் கங்கையை பூமிக்கு வரவழைத்துக் கொடுத்தார்.

    14 மனுவந்தரங்கள் :

    1.சுவயம்பு, 2.சுவாரோசிஷம், 3.உத்தமம், 4.தாமசம், 5.ரைவதம், 6.சாக்சூசம், 7.வைவசுவதம், 8.சாவர்ணி, 9.தக்ச சாவர்ணி, 10.பிரம்ம சாவர்ணி, 11.தர்ம சாவர்ணி, 12.ருத்திர சாவர்ணி, 13.ரவுசிய தேவ சாவர்ணி, 14.இந்திர சாவர்ணி ஆகியவையாகும்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இன்றும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

    துவாரபாலகர்கள்

    கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்பவர்கள், கருவறையின் வாசலில் இரு புறமும் சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்களே ‘துவார பாலகர்’ என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது ‘வாயில் காப்போர்’ என்பது பொருள். சிவாலயங்களில் எண்ணற்ற துவாரபாலகர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சண்டி- முண்டி, திரிசூலநாதர்- மழுவுடையார், சண்டன்- பிரசண்டன் உள்பட ஐந்து இணை துவாரபாலகர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். வைணவ ஆலயங்களில் ஜெயன்-விஜயனும், பெண் தெய்வ கருவறை முன்புள்ள துவாரபாலகிகளில் சுபத்ரா-அரபத்ரா ஆகியோரும் முக்கியமானவர்களாக உள்ளனர்.

    சயவன் முனிவர்

    அஸ்வினி குமாரர்களால் இளமையும், கண் பார்வையும் திரும்ப வரப் பெற்றவர் இந்த சயவன் முனிவர். வயோதிகரான சயவன், நெடுங்காலமாக தவத்தில் இருந்தார். அதனால் அவரைச் சுற்றி புற்று வளர்ந்து, பறவைகள் கூடுகட்டி இருந்தன. ஒரு முறை அங்கு வந்த சர்யாதி மன்னனின் மகள் சுகன்யா, விளையாட்டாய் பறவைகளின் கூட்டைக் கலைக்க, அவளது விரல் எதிர்பாராத விதமாக தவத்தில் ஆழ்ந்திருந்த முனிவரின் கண்ணில்பட்டு பார்வை பறிபோனது.



    இதையடுத்து தனது மகளை, முனிவருக்கே திருமணம் செய்து வைத்தான் சர்யாதி மன்னன். ஒரு நாள் அஸ்வினி குமாரர்கள், சுகன்யாவைச் சந்தித்தனர். சயவன் முனிவருக்கு இளமையையும், கண் பார்வையையும் தருவதாக கூறினர். பின் சயவன் முனிவரும், அஸ்வினி குமாரர்களும் அங்கிருந்த குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் மூவருமே ஒரே உருவத்தில் காட்சியளித்தனர். அதில் சயவன் முனிவரை சரியாக அடையாளம் காட்டினாள் சுகன்யா. இதையடுத்து சயவன் முனிவருக்கு இளமையும், கண் பார்வையும் கிடைத்தது.

    துரியோதனன்

    திருதராஷ்டிரன்- காந்தாரி தம்பதியரின் மூத்த மகன். கவுரவர்கள் நூறு பேரில் முதன்மையானவன். ‘துரியோதனன்’ என்பதற்கு ‘வெற்றி கொள்ளப்பட முடியாதவன்’ என்று பொருள். உடல் குறைபாடு காரணமாக தந்தையிடம் இருந்து நழுவிச்சென்ற அரசாளும் பதவியை, பாண்டவர்களிடம் இருந்து பெறவேண்டும் என்ற எண்ணம், துரியோதனன் உள்ளிட்ட கவுரவர்களிடம் வன்மத்தை விதைத்தது. அதன் காரணமாக மகாபாரதப் போர் மூண்டது. 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் இறுதி நாளில் பீமனுடன் நடந்த யுத்தத்தில் துரியோதனன் கொல்லப்பட்டான்.

    துர்வாசர்

    மாபெரும் தவசிகளான அத்திரி - அனுசூயா தம்பதியரில் ஆகச் சிறந்த புதல்வர் தான் துர்வாசர். இவர் மற்ற முனிவர்களைப் போல அல்ல.. தன்னுடைய முன் கோபத்தாலும், சட்டென்று ஒருவரை சபித்துவிடும் தன்மையாலும் கவனம் பெற்றவர். விஸ்வாமித்திரரின் மகளான சகுந்தலை, துஷ்யந்தன் என்ற மன்னனை கந்தர்வ மணம் செய்து கொண்டாள். ஒரு முறை தன்னை அவமதித்த குற்றத்திற்காக துஷ்யந்தனின் மனதில் இருந்து சகுந்தலையின் நினைவுகளை அகற்றி சாபம் அளித்தார் துர்வாசர். சாபத்தை மட்டுமே அளிப்பவர் அல்ல அவர். தன் மனம் மகிழும் படி நடந்து கொள்பவர்களுக்கு வரமும் அளிப்பவர். அவர் பாண்டுவின் மனைவி குந்திக்கு ‘தேவர்களில் எவரை நினைத்தாலும் அவர்கள் வந்து அருள்வார்கள்’ என்ற வரம் அளித்தார். அந்த வரம் தான் கர்ணன், பாண்டவர்களான தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறக்க காரணமாக இருந்தது.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்த பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    மாபலி சக்கரவர்த்தி

    அசுரர்களின் அரசன் மாபலி. இந்த மன்னன், நாராயணரையே எப்போதும் நினைத்து வழிபட்டு வந்த பிரகலாதனின் பேரன் ஆவார். மாவலி சக்கரவர்த்தி தன்னுடைய வலிமையால், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்து வந்தார்.

    வளர்ந்து கொண்டே சென்ற மாபலியின் வலிமையால், தனது இந்திர பதவிக்கு ஆபத்து வரலாம் என்று தேவேந்திரன் அச்சம் கொண்டான். அவனது அச்சத்தைப் போக்குவதுடன், மாபலிக்கும் அனுக்கிரகம் செய்ய நினைத்த மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தார். பின்னர் மாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார்.

    அதற்கு மாபலி சக்கரவர்த்தி ஒப்புக்கொண்டதும், விஸ்வரூபம் எடுத்து முதல் அடியால் பூமியையும், இரண்டாம் அடியால் வானத்தையும் அளந்தார். ‘மூன்றாம் அடியை எங்கு வைப்பது?’ என்று வாமனர் கேட்க, தன் தலையில் வைக்கும்படி மாபலி கூறினார். மூன்றாவது அடியை மாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்த வாமனர், அவரை பாதாள உலகத்தில் தள்ளினார்.

    ஒற்றைக் கொம்பன்

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    யானையின் முக வடிவத்தைப் பெற்றவர் விநாயகப் பெருமான். அந்த யானை முகத்தில் ஒற்றைத் தந்தம் முறிந்த நிலையில் இருக்கும் விநாயகரை ‘ஒற்றைக் கொம்பன்’ என்று அழைக்கிறார்கள். விநாயகரின் ஒன்றை தந்தம் முறிந்த நிலையில் இருப்பதற்கு, மகாபாரத இதிகாசம் ஒரு கதையைச் சொல்கிறது. மகாபாரத பெருங்காப்பியத்தை எழுத வியாசர் முடிவு செய்தார். தான் சொல்லச் சொல்ல விரைந்து எழுதுவதற்கு விநாயகப் பெருமானை, வியாசர் தேர்வு செய்தார். வியாசர் மகாபாரதத்தின் கதையைச் சொல்லச் செல்ல, மயில் இறகு கொண்டு விநாயகப் பெருமான் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மயில் இறகு முறிந்து போக, எழுதும் பணி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய தந்தத்தில் ஒன்றை முறித்து தொடர்ந்து எழுதினார், விநாயகர். இதனால் தான் அவர் ‘ஒற்றைக் கொம்பன்’ என்று போற்றப்படுகிறார்.

    சித்ர குப்தர்

    ஒரு மனிதனின் பாவ- புண்ணியங்களின் படி, அவரது விதியை முடிவு செய்பவர் எமதர்மன். அவரது உதவியாளர் தான் சித்ரகுப்தர். இவர்தான் ஒரு மனிதன் செய்யும் பாவ- புண்ணியங்களை கணக்கெடுத்து, அதை எமதர்மனிடம் சொல்பவர். சிவபெருமான் வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியவர் என்பதால் இவரை ‘சித்ர குப்தர்’ என்று போற்றுகின்றனர். இவர் பிறக்கும் போதே, கணக்கெடுப்பதற்காக ஓலைச்சுவடி மற்றும் எழுத்தாணியுடன் பிறந்தார் என்று புராணக் கதை சொல்கிறது. ஒருவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு நன்மைகள் தரும் பலன்களையும், தீமைகளுக்கு தண்டனைகளையும் எமதர்மன் வழங்குவார். எனவே சித்ர குப்தரை வணங்கி வழிபட்டால், நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகமாக உள்ளது.

    சாயா

    சூரியனின் மனைவி தான் இந்த சாயா தேவி. சூரியனின் முதல் மனைவி சஞ்சனாவால், சூரியனின் தீவிரமான ஒளியைத் தாங்க முடியவில்லை. அதனால் தனது மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்று விட்டாள். அப்படி அவள் செல்லும் போது, தனது நிழலை சூரியலோகத்திலேயே விட்டுச் சென்றாள். அந்த நிழல் உருவமே ‘சாயா தேவி’. நிழல் என்றாலும் சாயாதேவியும் சஞ்சனாவைப் போன்ற உருவத்திலேயே இருந்தாள். இதனால் சஞ்சனா இல்லாததை சூரியனால் அறிய முடியவில்லை. சூரியனுக்கும் சஞ்சனாவின் நிழல் உருவமான சாயவுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகே சாயா உண்மையை சூரியனிடம் கூறினாள். சூரியன் சஞ்சனாவை மீண்டும் அழைத்து வரக் கூறினார்.

    துச்சாதனன்

    திருதிராஸ்டிரர்- காந்தாரி தம்பதியரின் நூறு புதல்வர்களின் ஒருவன் தான் இந்த துச்சாதனன். கவுரவர்களில் துரியோதனனுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்டவன். மகாபாரதப் போருக்கு மிக முக்கிய காரணம், அரசவையின் முன்பு திரவுபதி அவமதிக்கப்பட்டதுதான். அந்த அவமதிப்பை துரியோதனனின் உத்தரவுப்படி நிறைவேற்றியவன் துச்சாதனன். சூதாட்டத்தில் கவுரவர்களிடம் நாட்டையும், மனைவி திரவுபதியையும் கூட இழந்து விட்டனர் பாண்டவர்கள். இதையடுத்து திரவுபதியை அரசவைக்கு இழுத்து வந்து, துகிலுரியச் சொன்னான் துரியோதனன். அண்ணனின் உத்தரவுப்படி திரவுபதியை அரசவைக்கு இழுத்து வந்ததோடு, அவளது சேலையை துகிலுரிய முற்பட்டவன் துச்சாதனன். குருசேத்திரப் போரில் பீமனால், இவன் கொல்லப்பட்டான். 
    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புராண கதாபாத்திரங்கள் :

    புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம். சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

    ஏகலைவன் :


    மகாபாரதத்தில் வேடுவர்களின் தலைவனாக இருந்தவர் ஹிரனியதனுஷ். இவரது மகன் தான் ஏகலைவன். இவன் குரு பக்திக்கு சிறந்த உதாரணமாக சொல்லப்படுகிறான். வேடவர் குலத்தில் பிறந்த ஏகலைவனுக்கு, குருவில் சிறந்தவரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு வில்வித்தை கற்றுத்தர துரோணர் மறுத்து விடுகிறார். இதனால் துரோணரின் உருவ சிலையை செய்து, அவரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை பயில்கிறான், ஏகலைவன். அதன் மூலம் வில்வித்தையில் சிறந்தவராக மகாபாரதம் குறிப்பிடும் அர்ச்சுனனைவிட சிறப்பானவனாக திகழ்கிறான். இதனை அறிந்த அர்ச்சுனன், அதுபற்றி துரோணரிடம் கூறுகிறான்.

    துரோணரோ, ஏகலைவனை அழைத்து, குரு தட்சணையாக அவனது வலது கை கட்டைவிரலைக் கேட்கிறார். சற்றும் யோசிக்காத ஏகலைவன், தன் குருவிற்காக தன் கட்டை விரலையே காணிக்கையாக செலுத்தி, குரு பக்தியில் சிறந்து விளங்கினான் என்கிறது மகாபாரதக் கதை.

    காந்தாரி :


    அஸ்தினாபுரத்து அரசன் திருதிராஷ்டிரரின் மனைவி தான் காந்தாரி. கவுரவர்கள் என்று அழைக்கப்பட்ட துரியோதனன் முதலான 100 பேரையும் பெற்றெடுத்தவள் காந்தாரி. திருதிராஷ்டிரர் பார்வையற்றவர் என்பதால், காந்தாரியும் கணவரின் இருள் உலக துயரை பகிர்ந்து கொள்வதற்காக, மணம் முடிந்த காலம் முதல் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள், தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தியவள்.



    சனுரா :

    மதுராபுரியை ஆண்டு வந்தவன் கம்சன். இவன் கிருஷ்ணரை பெற்றெடுத்த தேவகியின் சகோதரன். தங்கையின் மகனால் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பலவித முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் கோகுலத்தில் இருந்த கிருஷ்ணரை, மதுராபுரிக்கு அழைத்து மல்யுத்தம் செய்து கொல்ல முடிவு செய்தான், கம்சன். கிருஷ்ணரையும், பலராமரையும் மல்யுத்தம் புரிந்து கொல்வதற்காக நியமிக்கப்பட்டவன் தான் சனுரா. இவனுக்கு முஷ்டிகன் என்ற சகோதரன் உண்டு. இருவரும் மாபெரும் மல்யுத்த வீரர்கள். ஒரு அரங்கத்தில் சனுரா கிருஷ்ணரிடம் சவால் விட, அந்த ஆபத்தான சண்டையில் கிருஷ்ணர் சனுரானையும், பலராமர் முஷ்டிகனையும் வீழ்த்தினார்.

    பகீரதன் :

    பகீரதன் சூரிய வம்சத்து அரசர். இவர்தான் கங்கையை ஆகாயத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வந்தவர் என்று புராணங்கள் சொல்கின்றன. இவர் தனது முன்னோர் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்கான வழியைத் தேடினார். அதற்கு ஆகாயத்தில் இருக்கும் கங்கையை, பூமிக்கு கொண்டு வந்து சிவபெருமானை அபிஷேகித்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதனால் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வர கடுமையாக தவம் இருந்தார். இதையடுத்து சிவபெருமானின் அருளால் கங்கை, பூமியை வந்தடைந்தது. அதன் மூலம் பகீரதனின் முன்னோர்கள் முக்தி அடைந்தனர். கங்கையை பூமிக்குக் கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்த காரணத்தால்தான் அவரது பெயர் ‘பகீரதன்’ என்று ஆனது.

    சிந்தாமணி :

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றில் ஒன்று தான் சிந்தாமணி என்ற ஒருவகை கல். அந்த அற்புதக் கல்லை, சிறந்த முனிவராக திகழ்ந்த கபில முனிவரிடம் அளித்தனர். அந்த முனிவர் சிந்தாமணி கல்லை, இளவரசர் கனராஜனுக்கு ஆடம்பர விருந்து அளிப்பதற்கு உபயோகித்தார். சிந்தாமணி செய்யும் அற்புதத்தை கண்டு வியந்த இளவரசன், அதை அபகரித்து சென்று விட்டான். எனவே அந்த கல்லை மீட்டு தருமாறு விநாயகப்பெருமானிடம் முனிவர் வேண்டினார். அவர் இளவரசனுடன் போரிட்டு, சிந்தாமணி கல்லை மீட்டார்.

    ×