search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

    ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்

    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் பேட்டை ரோட்டில் உள்ள கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்தார். மாலையில் சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று அதிகாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சன்னதியில் இருந்து நெல்லையப்பரை நெல்லை கோவிந்தர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.


    ஐப்பசி திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நெல்லை கோவிந்தர், அம்பாளை நெல்லையப் பருக்கு தாரை வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானமும், மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா சென்றனர்.

    பின்னர் அம்பாள் ஊஞ்சல் விழா நடந்தது. இந்த ஊஞ்சல் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. 7-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.
    Next Story
    ×