search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையருள் தரும் அபிஷேகப் பொருள்
    X

    இறையருள் தரும் அபிஷேகப் பொருள்

    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சில தெய்வங்களுக்கு சில அபிஷேகப் பொருட்கள் மூலம் நாம் அபிஷேகம் செய்தால் உடனடியாகப் பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் திருநீலக்குடி இறைவனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் (நல்லெண்ணெய்) செய்வது நல்லது. திருப்பாம்புரம் என்ற ஊரில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு சதுர்த்தியன்று தேனாபிஷேகம் செய்வர்.

    திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமிக்கு குடம், குடமாகப் பாலாபிஷேகம் செய்வர். அபிஷேகப் பொருட்களை ஆகர்ஷிக்கும் ஸ்தலங்களாக விளங்கும் இந்த ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலமும், பிரதோஷ நேரத்தில் நந்திக்கு செய்யும் 16 வகை அபிஷேகத்தின் மூலமும், கத்திரி வெயில் காலத்தில் சிவனுக்கு மேனியில் சொட்டுச் சொட்டாக வடியும் தீர்த்த அபிஷேகத்தின் மூலமும் நாம் நற்பலன் பெற முடியும்.

    இறைவனின் மேனி குளிர்ந்தால் இதயமும் மகிழும் வரம் நமக்குக் கிடைக்கும். 
    Next Story
    ×