என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமயபுரத்தில் தங்க கமல வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா
Byமாலை மலர்25 April 2018 5:02 AM GMT (Updated: 25 April 2018 5:02 AM GMT)
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபத்திற்கு புறப்பாடு நடைபெற்றது. மாலையில் திருமஞ்சனமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் வாண வேடிக்கையுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேங்காய் பழக்கடை மற்றும் புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் விழாக்குழுத்தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து வசந்த மண்டபத்திற்கு புறப்பாடு நடைபெற்றது. மாலையில் திருமஞ்சனமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் வாண வேடிக்கையுடன் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேங்காய் பழக்கடை மற்றும் புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் விழாக்குழுத்தலைவர் எஸ்.ஆர்.மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X