என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மதுரைகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
Byமாலை மலர்7 April 2018 5:02 AM GMT (Updated: 7 April 2018 5:02 AM GMT)
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு தேர் தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் தலையிலும், தோளிலும் தேர்களை சுமந்து சென்றனர்.
தொட்டியம் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 27-ந் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு 27-ந் தேதி முதல் கோவிலின் உட்பிரகாரம், அம்மன் சன்னதி ஒருவாரம் அடைக்கப்பட்டது. இதையொட்டி அம்மன் கருவறையில் 2 பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரித்து அதில் வைக்கப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டது. அதற்கு மறுநாள் இரவு கோவிலின் உட்பிரகாரத்தில் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
பெரிய தேரில் எழுந்தருளிய ஓலைப்பிடாரி, சின்ன தேரில் எழுந்தருளிய மதுரைகாளியம்மனை படத்தில் காணலாம்.
கடந்த 3-ந் தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில் சின்ன தேர், பெரிய தேர் தலையலங்காரம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் தூக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து கோட்டைமேடு, சந்தைப்பேட்டை வழியாக பெரிய தேர் மற்றும் சின்ன தேர் ஆகிய இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே தேர்கள் செல்கின்றன.
இதைத்தொடர்ந்து வரும் நாட்களில் அழகு நாச்சியம்மன் கோவில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சி, எல்லை முகம் பார்க்கும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, எருமைக்கிடா வெட்டு ஆகியவை நடக்கிறது. மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் வருகிற 10-ந் தேதி திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து வந்தவர்களும், தொட்டியத்தை சுற்றியுள்ள 18 பட்டியை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 20-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 27-ந் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு வரதராஜபுரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு 27-ந் தேதி முதல் கோவிலின் உட்பிரகாரம், அம்மன் சன்னதி ஒருவாரம் அடைக்கப்பட்டது. இதையொட்டி அம்மன் கருவறையில் 2 பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு முழ வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரித்து அதில் வைக்கப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டது. அதற்கு மறுநாள் இரவு கோவிலின் உட்பிரகாரத்தில் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
பெரிய தேரில் எழுந்தருளிய ஓலைப்பிடாரி, சின்ன தேரில் எழுந்தருளிய மதுரைகாளியம்மனை படத்தில் காணலாம்.
கடந்த 3-ந் தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில் சின்ன தேர், பெரிய தேர் தலையலங்காரம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் தூக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. கோவிலில் இருந்து கோட்டைமேடு, சந்தைப்பேட்டை வழியாக பெரிய தேர் மற்றும் சின்ன தேர் ஆகிய இரண்டு தேர்களையும் பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். நேற்று மாலை எல்லை உடைக்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய வீதிகள் வழியே தேர்கள் செல்கின்றன.
இதைத்தொடர்ந்து வரும் நாட்களில் அழகு நாச்சியம்மன் கோவில் எல்லை உடைக்கும் நிகழ்ச்சி, எல்லை முகம் பார்க்கும் நிகழ்ச்சி, வாணவேடிக்கை, எருமைக்கிடா வெட்டு ஆகியவை நடக்கிறது. மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் வருகிற 10-ந் தேதி திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து வந்தவர்களும், தொட்டியத்தை சுற்றியுள்ள 18 பட்டியை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X