என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்
Byமாலை மலர்26 Feb 2018 6:13 AM GMT (Updated: 26 Feb 2018 6:13 AM GMT)
திருப்பதியில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது. முதல் நாள் சீதா, ராமர், லட்சுமணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று மாலை 5 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து, தெப்பத்தேரில் எழுந்தருளினர். சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் மிதந்தவாறு உற்சவ மூர்த்திகள் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கோவில் புஷ்கரணியையொட்டி நான்கு பக்கமும் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புஷ்கரணியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் யாரும் தண்ணீரில் இறங்காமல் இருக்க, ஒலி பெருக்கி மூலம் அவ்வபோது அறிவிக்கப்பட்டது. தெப்ப உற்சவத்தால் கோவிலில் மாலை நேரத்தில் நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து தெப்ப உற்சவத்தின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர்-ருக்மணி, ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு மாடவீதிகளின் வழியாக புஷ்கரணிக்குச் சென்று தெப்பத்தில் எழுந்தருள்கின்றனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தேரில் 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
27-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 28-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான மார்ச் மாதம் 1-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதனால், கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில் புஷ்கரணியையொட்டி நான்கு பக்கமும் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புஷ்கரணியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் யாரும் தண்ணீரில் இறங்காமல் இருக்க, ஒலி பெருக்கி மூலம் அவ்வபோது அறிவிக்கப்பட்டது. தெப்ப உற்சவத்தால் கோவிலில் மாலை நேரத்தில் நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து தெப்ப உற்சவத்தின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர்-ருக்மணி, ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு மாடவீதிகளின் வழியாக புஷ்கரணிக்குச் சென்று தெப்பத்தில் எழுந்தருள்கின்றனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தேரில் 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
27-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 28-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான மார்ச் மாதம் 1-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இதனால், கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X