என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பச்சனம்பட்டி கோலுகாரனூர் செங்காளியம்மன் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்11 Aug 2017 4:14 AM GMT (Updated: 11 Aug 2017 4:14 AM GMT)
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி கோலுகாரனூர் செங்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி கோலுகாரனூரில் செங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி சக்தி கரகம், எருமை கிடா வெட்டுதல், தீமிதி விழா மற்றும் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து பூங்கரகம், அக்னிகரகம், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
அன்று இரவு 7 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மஞ்சள் நீர் மெரமனையும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நையாண்டி கரகம், குறவன் குறத்தி நடனம் மற்றும் வாண வேடிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் இளங்கோவன், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அன்று இரவு 7 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று மஞ்சள் நீர் மெரமனையும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. கந்தசாமி, ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நையாண்டி கரகம், குறவன் குறத்தி நடனம் மற்றும் வாண வேடிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் இளங்கோவன், குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X