என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்15 Jun 2017 5:12 AM GMT (Updated: 15 Jun 2017 5:12 AM GMT)
மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ளது பாலாம்பிகா உடனுறை மாற்றுரைவரதீஸ்வரர் கோவில். இங்கு எழுந்தருளி உள்ள இறைவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மாற்றுரைத்து பொற்கிழி அளித்தமையால் மாற்றுரைவரதர் என்ற திருப்பெயர் கொண்டு விளங்குகிறார்.
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி. காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலதோஷத்தை நீக்கி நலம்பெற வைக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களாலும் தொடர்ந்து பாண்டிய போசள மன்னராலும் திருப்பணிகள் செய்யப்பட்டது. தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 8-ந் தேதி விநாயகர் வழிபாடு, தனபூஜை, கோபூஜை ஆகியவற்றுடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6 மணியளவில் கடம் புறப்பாடும் 7.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்ற மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையரும், கோவில் அலுவலருமான ரவிச்சந்திரன், தக்கார் ஜெய்கிஷன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி. காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலதோஷத்தை நீக்கி நலம்பெற வைக்கும் தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களாலும் தொடர்ந்து பாண்டிய போசள மன்னராலும் திருப்பணிகள் செய்யப்பட்டது. தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 8-ந் தேதி விநாயகர் வழிபாடு, தனபூஜை, கோபூஜை ஆகியவற்றுடன் தொடங்கி ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6 மணியளவில் கடம் புறப்பாடும் 7.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்ற மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையரும், கோவில் அலுவலருமான ரவிச்சந்திரன், தக்கார் ஜெய்கிஷன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X