search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மோற்சவம் நடத்துவதற்கான காரணங்கள்
    X

    பிரம்மோற்சவம் நடத்துவதற்கான காரணங்கள்

    கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்சவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம்.
    கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்சவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். கோயிலுக்கு வந்து வழிபட முடியாதவர்கள் கூட பிரம்மோற்சவ வீதியுலாவின் போது இறைவனைத் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர்.

    பிரம்மோற்சவத்தை 9 நாட்களாவது நடத்த வேண்டும் என்பது விதி. விழா நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர். 12நாள் திருவிழா நடந்தால் பைத்ருகம், 9நாள்- சவுக்கியம், 7நாள்- ஸ்ரீகரம், 5நாள்- பார்த்திவம், 3நாள்- சாத்விகம், ஒருநாள் மட்டும் நடத்துவதற்கு "சைவம்'.

    திருவிழாவின் முதல்நாள், கோயில் கொடிமரத்தில் கொடியேற்ற வேண்டும். திருவிழாவை முறையாக நடத்தாவிட்டால், அரசுக்கும், மக்களுக்கும் தீங்கு நேரும் என ஞானோத்திர ஆகமம் கூறுகிறது.
    Next Story
    ×