search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாரதியாரை கவர்ந்த சித்தானந்தா கோவில்
    X

    பாரதியாரை கவர்ந்த சித்தானந்தா கோவில்

    புதுவையில் மணக்குள விநாயகர் கோவில் புகழ்பெற்று விளங்குவது போல் சித்தானந்தா கோவிலும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்கிறது.
    புதுவையில் மணக்குள விநாயகர் கோவில் புகழ்பெற்று விளங்குவது போல் சித்தானந்தா கோவிலும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு சென்று சித்தானந்தாவை வணங்கினால் வேண்டிய வரம் கிடைப்பதாகவும், தீராத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் மக்கள் நம்பு கின்றனர். குறிப்பாக நோய்களில் இருந்து விடுதலை கிடைப்பதாக கூறுகின்றனர்.

    எனவே, சித்தானந்தா கோவிலில் பக்தர்கள் குவிவது வாடிக்கையானதாக உள்ளது. சிலர் தினமும் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அலுவலகங்களுக்கு செல்லும் பலர் கோவிலுக்கு சென்று வழி பட்டு விட்டுத்தான் பணிக்கு செல்கிறார்கள்.

    சித்தானந்தா மீது பற்றுதல் கொண்டு வழிபாடு செய்தவர்களில் மகாகவி பாரதியாரும் ஒருவர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த காலத்தில் பாரதியார் நீண்ட காலம் புதுவையில் வசித்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி சித்தானந்தா கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கு நீண்ட நேரம் இருந்து வழிபடுவதுடன் பயபக்தியுடன் பாடல்களை பாடுவது வழக்கம். பாரதியார் அடிக்கடி செல்லும் குயில் தோப்பு சித்தானந்தா கோவில் அருகேதான் இருந்தது. அங்கு இருந்துதான் பாரதியார் தனது புகழ்பெற்ற குயில்பாட்டு எழுதினார். சித்தானந்தா கோவிலில் அமர்ந்தும் பாரதியார் கவிதை எழுதுவது வழக்கம்.

    குரு சித்தானந்தா கடலூர் வண்டிபாளையத்தை சேர்ந்தவர். சித்தராக மாறி இருந்த அவர் கடலூர் பாடலீசுவரர் கோவில் அருகே தங்கி இருந்து பாடலீசுவரர் கோவிலில் வழிபாடு செய்து வந்தார். புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த முத்துகுமாரசாமி பிள்ளை அடிக்கடி கடலூர் பாடலீசுவரர் கோவிலுக்கு செல்வார். அப் போது சித்தானந்தாவை அறிந்த முத்துகுமாரசாமி பிள்ளை சித்தா னந்தாவையும் சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இந்த நிலையில் முத்துகுமாரசாமி பிள்ளை மனைவி உடல்நிலை பாதிப்படைந்தது. அதில் இருந்து அவர் மீள முடியாமல் தவித்தார்.

    எனவே, சித்தானந்தா நேரடியாக வந்து தனது மனைவிக்கு ஆசி வழங்கினால் நோய் தீர்ந்து விடும் என்று முத்துகுமாரசாமிபிள்ளை கருதினார். இதற்காக சித்தானந்தாவை புதுவைக்கு அழைத்து வந்தார். அவர் ஆசி வழங்கியதை அடுத்து முத்துகுமாரசாமி பிள்ளையின் மனைவிக்கு நோய் குணமானது.

    இதன் பிறகு சித்தானந்தா புதுவையிலேயே தங்கி விட்டார். அவரது சக்தியை அறிந்த புதுவை மக்கள் ஏராளமானோர் சித்தானந்தாவை தேடி வந்து வழிபட்டனர். அவர்களுக்கு சித்தானந்தா அருளாசி வழங்கினார். இதனால் பக்தர்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆசி வழங்கினார்.
     
    இந்த நிலையில் சித்தானந்தா வயதான நிலையை எட்டி இருந்தார். ஒரு தடவை முத்துகுமாரசாமி பிள்ளையுடன் சித்தானந்தா கருவடி குப்பம் வழியாக நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது, இப்போது கோவில் அமைந்துள்ள இடம் அருகே அவர்கள் சென்றனர். அந்த இடம் சித்தானந் தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு இந்த இடத்தில் சமாதி அமைய வேண்டும் என்று விரும்புகிறேன் என முத்துகுமாரசாமியிடம் சித்தானந்தா கூறினார்.

    அவர் குறிப்பிட்ட நாளில் ஜீவ சமாதி அடைய முன்வந்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 1837-ம் ஆண்டு மே 28-ந்தேதி அந்த இடத்தில் பத் மாசனம் இருந்த நிலையில் சித்தா னந்தா ஜீவசமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் சிவலிங்கம் அமைத்து கோவில் எழுப்பப்பட்டது. கோவிலில் வணங் கினால் தீராத பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. சித்தானந்தா கோவிலில் குரு தட்சிணாமூர்த்தி சிலையும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதுவும் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கிறது. எனவே, குருவை வழிபடுவதற்காக வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர் கள் வருகிறார்கள்.

    சித்தானந்தா கோவில் உள்ள மணி, பிரான்சு நாட்டில் இருந்து விசேஷமாக தயாரித்து கொண்டு வரப்பட்டதாகும். அந்த மணியில் சித்தானந்தா உருவம் பொறிக்கப் பட் டுள்ளது. சித்தானந்தா கோவிலில் தினமும் காலையில் தொடங்கி இரவு வரை பூஜை நடைபெறும். மகாசங்கடகர சதுர்த்தி, மகா சிவராத்திரி குரு பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
    Next Story
    ×