search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லா செயல்களிலும் வெற்றி தரும் நீலபதாகா மந்திரம்
    X

    எல்லா செயல்களிலும் வெற்றி தரும் நீலபதாகா மந்திரம்

    நீலபதாகா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை கிடைக்கும்.
    நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள்.

    சிவப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளன. நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள்.

    மந்திரம்:

    ஓம் நீலபதாகாயை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்:

    சுக்ல பட்ச ஏகாதசி, கிருஷ்ண பட்ச பஞ்சமி.

    பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.
    Next Story
    ×