search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழக்குகளில் வெற்றி தரும் விஜயா தேவி மந்திரம்
    X

    வழக்குகளில் வெற்றி தரும் விஜயா தேவி மந்திரம்

    விஜயா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
    இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் பழம், அல்லி மலரை ஏந்தி வலதுகாலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் காட்சி தருகிறாள். சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம்.

    மந்திரம்:

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவாதசி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி.

    பலன்கள்: எந்தவகை வழக்குகளிலும் வெற்றி. கலைகளில் தேர்ச்சி.
    Next Story
    ×