என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இழந்த செல்வம் கிடைக்கும் விரதம்
Byமாலை மலர்17 Jun 2017 8:26 AM GMT (Updated: 17 Jun 2017 8:26 AM GMT)
சுசந்திரா எனும் அரசி இந்த விரதத்தை மேற்கொண்டு தான் இழந்த சொத்துக்களை அனைத்தும் திரும்பப் பெற்றதாக புராணக்கதை ஒன்று உள்ளது.
வரலட்சுமி விரதத்தால் தனது சாபம் நீங்கப் பெற்ற சித்ரநேமி கதையைப் போல், சுசந்திரா எனும் அரசியும் இந்த விரதத்தை மேற்கொண்டு தான் இழந்த சொத்துக்களை அனைத்தும் திரும்பப் பெற்றதாக புராணக்கதை ஒன்று உள்ளது.
மகத நாட்டின் அரசியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் ஆணவத்தால் மகாலட்சுமியையே அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டாள். மகாலட்சுமியை அவமதித்ததால் அவளிடமிருந்த செல்வம் அனைத்தும் பறிபோனது. இதனால் நாட்டை விட்டு வெளியேறி காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
அரசி சுசந்திராவின் மகள் சாருமதி, வரலட்சுமி விரதமிருந்தால் தாங்கள் இழந்த செல்வத்தைப் பெறலாம் என்பது குறித்து அறிந்தாள். அதன் பிறகு அவள், அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் விரதத்தில் மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, அவளுக்கு அனைத்துச் செல்வங்களையும், நலன்களையும் தந்தருளினார்.
தன் மகளின் வறுமை நிலை மாறிச் செல்வச் செழிப்புடன் வாழ்வதைக் கண்ட சுசந்திரா, தன் மகள் சாருமதி கடைப்பிடித்த விரதத்தைத் தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றாள். அதன் பின்னர் வரலட்சுமி விரதம் அனைத்துப் பெண்களாலும் மேற்கொள்ளப்படும் புனித விரதமாக மாறியது.
மகத நாட்டின் அரசியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் ஆணவத்தால் மகாலட்சுமியையே அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டாள். மகாலட்சுமியை அவமதித்ததால் அவளிடமிருந்த செல்வம் அனைத்தும் பறிபோனது. இதனால் நாட்டை விட்டு வெளியேறி காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
அரசி சுசந்திராவின் மகள் சாருமதி, வரலட்சுமி விரதமிருந்தால் தாங்கள் இழந்த செல்வத்தைப் பெறலாம் என்பது குறித்து அறிந்தாள். அதன் பிறகு அவள், அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் விரதத்தில் மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, அவளுக்கு அனைத்துச் செல்வங்களையும், நலன்களையும் தந்தருளினார்.
தன் மகளின் வறுமை நிலை மாறிச் செல்வச் செழிப்புடன் வாழ்வதைக் கண்ட சுசந்திரா, தன் மகள் சாருமதி கடைப்பிடித்த விரதத்தைத் தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் பெற்றாள். அதன் பின்னர் வரலட்சுமி விரதம் அனைத்துப் பெண்களாலும் மேற்கொள்ளப்படும் புனித விரதமாக மாறியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X