search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்களை நீக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்
    X

    பாவங்களை நீக்கும் பாபாங்குசா ஏகாதசி விரதம்

    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இந்த ஏகாதசி இருப்பதால் பாபாங்குசா ஏகாதசி எனப்பட்டது.
    ஒவ்வொருவருமே ஏராளமான வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து வருகிறோம் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைப்படுத்தும் துயரம் வேதனை எனப்படும். கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரங்களில் ஆழ்த்துபவை சோதனை எனப்படும். வேதனைகளையும், சோதனைகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் ஏகாதசி இது.

    அதுமட்டுமில்லாமல் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால் உண்டாகும் பலன்களையும் இந்த ஏகாதசியே கொடுக்கும். விதிமுறை தெரியாமலோ அல்லது பெருமைக்காகவோ இந்த விரதம் இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் எல்லாம் தரக்கூடியது இந்த ஏகாதசி.

    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இது இருப்பதால் பாபாங்குசா எனப்பட்டது.
    Next Story
    ×