என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கருணை வடிவான நபிகளாரின் பெருந்தன்மை
Byமாலை மலர்23 Jun 2017 2:54 AM GMT (Updated: 23 Jun 2017 2:54 AM GMT)
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு ஒருவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.
அகழ் மற்றும் குறைழா போர்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பல குழுக்களையும் படைப்பிரிவுகளையும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள்.
தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து ஸுமாமா இப்னு உஸால் என்பவரை அனுப்பினான். நபிகளார் அனுப்பிய அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸாலை கைது செய்து கொண்டு வந்தார்கள்.
பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “ஸுமாமாவே! உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால், மரண தண்டனை விதிக்க வேண்டிய ஒருவனையே கொல்வீர்கள். ஆனால் என்னை மன்னித்து எனக்கு விடுதலை அளித்தால் உங்களுக்கு நான் விசுவாசியாக, காலம் காலமாகக் கடமைப்பட்டவனாகிவிடுவேன். நீங்கள் செல்வத்தை விரும்பினால் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், நான் தருகிறேன்' என்று பதிலளித்தார். எனவே, நபிகளார் அவருக்கு எந்தத் தீர்ப்பும் வழங்காமல் சென்றுவிட்டார்கள்.
மறு நாளும் நபி(ஸல்) அவர்கள் ஸுமாமாவிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் ஏற்கெனவே கூறியது தான்: நீங்கள் எனக்கு மன்னிப்பு அளித்து உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்' என்றார். அன்றும் நபி(ஸல்) எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “ஸுமாமாவே!' நீ என்ன கருதுகிறாய்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்' என்று கூறினார்கள்.
உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு ஒருவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், இன்று உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது மக்காவிற்குச் சென்று உம்ரா செய்ய விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுமாமா உம்ரா செய்ய அனுமதியளித்தார்கள். ஸுமாமா மக்காவிற்குச் சென்றபோது அங்கே ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதம் மாறவில்லை. மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை என்னுடைய நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது' என்று கூறினார்கள்.
இதனால் அவதிக்குள்ளான குறைஷிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, ஸுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்குக் கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர்.
கருணையே வடிவான நபி(ஸல்), குறைஷிகளின் கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.
ஸஹீஹ் புகாரி 5:64:4372, 2:44:2422, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா, நபியவர்களைக் கொல்வதற்காக யமன் நாட்டிலிருந்து ஸுமாமா இப்னு உஸால் என்பவரை அனுப்பினான். நபிகளார் அனுப்பிய அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸாலை கைது செய்து கொண்டு வந்தார்கள்.
பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “ஸுமாமாவே! உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால், மரண தண்டனை விதிக்க வேண்டிய ஒருவனையே கொல்வீர்கள். ஆனால் என்னை மன்னித்து எனக்கு விடுதலை அளித்தால் உங்களுக்கு நான் விசுவாசியாக, காலம் காலமாகக் கடமைப்பட்டவனாகிவிடுவேன். நீங்கள் செல்வத்தை விரும்பினால் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், நான் தருகிறேன்' என்று பதிலளித்தார். எனவே, நபிகளார் அவருக்கு எந்தத் தீர்ப்பும் வழங்காமல் சென்றுவிட்டார்கள்.
மறு நாளும் நபி(ஸல்) அவர்கள் ஸுமாமாவிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் ஏற்கெனவே கூறியது தான்: நீங்கள் எனக்கு மன்னிப்பு அளித்து உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்' என்றார். அன்றும் நபி(ஸல்) எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “ஸுமாமாவே!' நீ என்ன கருதுகிறாய்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்' என்று கூறினார்கள்.
உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு ஒருவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, இறைத்தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், இன்று உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றுவரை உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது மக்காவிற்குச் சென்று உம்ரா செய்ய விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுமாமா உம்ரா செய்ய அனுமதியளித்தார்கள். ஸுமாமா மக்காவிற்குச் சென்றபோது அங்கே ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதம் மாறவில்லை. மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை என்னுடைய நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது' என்று கூறினார்கள்.
இதனால் அவதிக்குள்ளான குறைஷிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கடிதம் எழுதினர். அதில் தங்களின் இரத்த பந்தத்தைக் கூறி, ஸுமாமா தங்களுக்கு வரும் தானியங்களைத் தடுக்காமல் இருக்க நபியவர்கள் அவருக்குக் கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர்.
கருணையே வடிவான நபி(ஸல்), குறைஷிகளின் கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.
ஸஹீஹ் புகாரி 5:64:4372, 2:44:2422, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X