search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இயக்குநர் சொன்ன கதையை கேட்டு நடிக்க மறுத்த அமலாபால் - விஷ்ணு விஷால் பேட்டி
    X

    இயக்குநர் சொன்ன கதையை கேட்டு நடிக்க மறுத்த அமலாபால் - விஷ்ணு விஷால் பேட்டி

    ராம்குமார் இயக்கத்தில் ராட்சசன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இயக்குநர் கதை சொல்வதை கேட்டு படத்தில் நடிக்க அமலாபால் மறுத்துவிட்டதாகவும், நான் தான் அவரை நடிக்க வைத்தேன் என்றும் விஷ்ணு விஷால் கூறினார். #Ratsasan
    ராட்ச‌சனாக களம் இறங்கி இருக்கும் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் இருந்து....

    ராட்ச‌சன் படம் ஒரு சைக்கோ இன்வெஸ்டிகே‌ஷன் திரில்லர். சீட்டு நுனியிலேயே அமர்ந்து பார்க்கும் அளவுக்கு சஸ்பென்ஸ் இருந்துகொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கும். போலீசே பிடிக்காத ஒருவன் போலீஸ் வேலையில் சேர்ந்து ஒரு பெரிய வழக்கை துப்பு துலக்கும் வேடம். 2 போலீஸ் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு முழு படத்திலும் போலீசாக நடித்ததில்லை. விக்ராந்த், கருணா என்று என் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

    போலீஸ் அதிகாரியான அப்பாவிடம் ஆலோசனை பெற்றீர்களா?

    கேட்டேன். அவரும் சில ஆலோசனைகள் சொன்னார். ஆனால் இந்த வேடம் போலீஸ் தான் லட்சியம் என்று வாழ்பவன் கிடையாது. எனவே பெரிய ஆலோசனைகள் தேவைப்படவில்லை.

    அமலாபால்?

    அழகான டீச்சராக வருகிறார். படத்தில் மிகச்சில கதாபாத்திரங்களே வருவதால் அனைவருமே நன்றாக நடிப்பவர்களாக வேண்டும் என்று தேர்ந்தெடுத்தோம். அமலாபால் படத்திற்குள் வந்ததே சுவாரசியமான வி‌ஷயம். இயக்குனர் ராம்குமார் ரொம்ப கூச்ச சுபாவம். அமலாவிடம் கதை சொல்லும்போதே கூச்சப்பட்டுக் கொண்டே சொன்னதால் அமலாவுக்கு படத்தின் மீது சந்தேகம் இருந்தது. மறுத்துவிட்டார். பின்னர் நானே அமலாவிடம் கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன். அமலா மட்டுமல்ல முனீஸ் காந்த், காளி வெங்கட் என அனைவருமே நீங்கள் இதுவரை பார்த்தது போல் அல்லாமல் புதிதாக தெரிவார்கள்.



    ராட்சசன் யார்?

    வில்லன் தான். அந்த வேடத்தை பற்றியோ, அந்த வேடத்தில் நடிப்பவர் பற்றியோ இப்போது எதுவும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரம்.

    காமெடி படங்களிலும் நடிக்கிறீர்கள், ராட்ச‌சன் போல சீரியஸ் படங்களிலும் நடிக்கிறீர்களே?

    எனக்கு கதை தான் முக்கியம். முண்டாசுப்பட்டி காமெடி படமாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல கதை இருந்தது. இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை என நான் நடித்த படங்கள் எல்லாமே அப்படித்தான். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு பிறகு மாவீரன் கிட்டு. இப்போது கதாநாயகனுக்கு பிறகு ராட்ச‌சன். அடுத்து ஜெகஜ்ஜால கில்லாடி பக்கா காமெடி படம். அதற்கு அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் காடன். எல்லாவற்றிலுமே கதை தான் முக்கியம். காமெடி படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்றால் நடிப்பதில் விருப்பம் அதிகம். #Ratsasan #VishnuVishal #AmalaPaul

    Next Story
    ×