search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது - விஷால்
    X

    சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது - விஷால்

    விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ மே 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நாளில் வெளியாகாது என்று விஷால் அறிவித்திருக்கிறார்.
    விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 



    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சொன்ன நாளில் இரும்புத்திரை வெளியாகாது என்று விஷால் தற்போது அறிவித்திருக்கிறார். சில தவறுகளால், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘இரும்புத்திரை’ ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் கூறியிருக்கிறார். #Irumbuthirai #Vishal
    Next Story
    ×