என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில்
Byமாலை மலர்13 Feb 2018 6:40 AM GMT (Updated: 13 Feb 2018 6:40 AM GMT)
கமல்ஹாசனின் காவி அரசியல் குறித்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வருகிறார்கள். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். ரஜினிகாந்தும் ஓரிரு மாதங்களில் தனி கட்சி தொடங்குகிறார். இருவரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்து இருக்கிறார். ரஜினியின் அரசியல் காவியாக இருக்காது என்று நம்புகிறேன். காவியாக இருக்குமானால் அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது கொள்கையாக இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பா.ஜனதாவுடன் அவர் நெருங்குவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இதனால்தான் கமல்ஹாசன் காவி அரசியல் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். “காவியாக இருந்தாலென்ன? கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாது” என்று அவர் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது கொள்கையாக இருக்கும் என்று ஏற்கனவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பா.ஜனதாவுடன் அவர் நெருங்குவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. இதனால்தான் கமல்ஹாசன் காவி அரசியல் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். “காவியாக இருந்தாலென்ன? கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாது” என்று அவர் கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X