என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`மேயாத மான்' இயக்குநருடன் இணையும் தனுஷ்?
Byமாலை மலர்25 Nov 2017 6:57 AM GMT (Updated: 25 Nov 2017 6:57 AM GMT)
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமாகி இருக்கும் ரத்ன குமார் அடுத்தாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
`வேலையில்லா பட்டதாரி-2' படத்திற்கு பிறகு தனுஷ் அவரது முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்டுனரி ஜார்னி ஆஃப் தி ஃபகீர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் தாமதமாகியிருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தாகி இருக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக `மேயாத மான்' இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் தனுஷின் வுண்டர்பார் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் `மேயாத மான்' படத்தை, படக்குழுவினருடன் பார்த்த தனுஷ் படக்குவினரை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது நடிப்பில் தாமதமாகியிருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதுதவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க இருக்கிறது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தாகி இருக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக `மேயாத மான்' இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் தனுஷின் வுண்டர்பார் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் `மேயாத மான்' படத்தை, படக்குழுவினருடன் பார்த்த தனுஷ் படக்குவினரை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஸ்ரீ தோனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X