என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறேன் - சமந்தா
Byமாலை மலர்20 Nov 2017 9:03 AM GMT (Updated: 20 Nov 2017 9:03 AM GMT)
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்துக்கு முன்பு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது விஷால், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்தையொட்டி சிறிது ஓய்வு எடுத்த சமந்தா, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இது பற்றி கூறிய அவர்...
“நான் தற்போது எனது வாழ்வில் ஒரு நடிகையாக ஒரு அற்புதமான திரை பயண அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு ‘கத்தி’, ‘தெறி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ உள்பட பல நல்ல படங்களில் நடித்தேன்.
அதுபோல், இனியும் என் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அழகான, அழுத்தமான கதைகள் மூலம் எனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
திருமணத்தையொட்டி சிறிது ஓய்வு எடுத்த சமந்தா, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இது பற்றி கூறிய அவர்...
“நான் தற்போது எனது வாழ்வில் ஒரு நடிகையாக ஒரு அற்புதமான திரை பயண அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு ‘கத்தி’, ‘தெறி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ உள்பட பல நல்ல படங்களில் நடித்தேன்.
அதுபோல், இனியும் என் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அழகான, அழுத்தமான கதைகள் மூலம் எனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X