என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும்: ஆண்ட்ரியா
Byமாலை மலர்20 Nov 2017 7:54 AM GMT (Updated: 20 Nov 2017 7:54 AM GMT)
ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், பட வாய்ப்புக்காக அனுசரித்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது.
சிலர் கஷ்டமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்லக்கூடாது. கஷ்டப்படாமல் எளிதாக முன்னேறி விடவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்க கூடாது. வாய்ப்புகள் வருவதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
உண்மையாகவும், கட்டுப்பாடுடனும் உழைப்பின் மீது நம்பிக்கையும் வைத்து காத்து இருந்தால் வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். ஒருவேளை பொறுமை இல்லாதவர்கள் தடம் மாறலாம். எல்லோரும் அப்படி இல்லை. சுசி லீக்சில் எனது படங்கள் வெளியானது பற்றி கேட்கப்படுகிறது. பிரபலமானவர்களின் பெயரையும், புகழையும் கெடுக்க ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.
சினிமா, அரசியல் என்று எல்லா துறைகளிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நான் தவறு செய்யாதபோது வருத்தப்பட அவசியம் இல்லை. அப்படி ஏதேனும் தவறு இழைத்தால் தைரியமாக ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது. ஆண்களும் பெண்களும் சமமாகி விட்டார்கள்.
பெண்கள் வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வந்துவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு பெண் வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறாள். கணவன் குடித்து வந்து அடித்து துன்புறுத்தியதால் அவனை விட்டு பிரிந்து தனது குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறாள்.
ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும். மது அருந்துவது ஆண்களின் உரிமை என்றால் பெண்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இதற்காக மதுவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்க கூடியது.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
“சினிமாவில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், பட வாய்ப்புக்காக அனுசரித்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது.
சிலர் கஷ்டமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்கலாம். அதற்காக எல்லோரையும் குற்றம் சொல்லக்கூடாது. கஷ்டப்படாமல் எளிதாக முன்னேறி விடவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்க கூடாது. வாய்ப்புகள் வருவதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
உண்மையாகவும், கட்டுப்பாடுடனும் உழைப்பின் மீது நம்பிக்கையும் வைத்து காத்து இருந்தால் வாய்ப்புகள் கண்டிப்பாக வரும். ஒருவேளை பொறுமை இல்லாதவர்கள் தடம் மாறலாம். எல்லோரும் அப்படி இல்லை. சுசி லீக்சில் எனது படங்கள் வெளியானது பற்றி கேட்கப்படுகிறது. பிரபலமானவர்களின் பெயரையும், புகழையும் கெடுக்க ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.
சினிமா, அரசியல் என்று எல்லா துறைகளிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நான் தவறு செய்யாதபோது வருத்தப்பட அவசியம் இல்லை. அப்படி ஏதேனும் தவறு இழைத்தால் தைரியமாக ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறது. ஆண்களும் பெண்களும் சமமாகி விட்டார்கள்.
பெண்கள் வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வந்துவிட்டது. எனக்கு தெரிந்த ஒரு பெண் வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கிறாள். கணவன் குடித்து வந்து அடித்து துன்புறுத்தியதால் அவனை விட்டு பிரிந்து தனது குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறாள்.
ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும். மது அருந்துவது ஆண்களின் உரிமை என்றால் பெண்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. இதற்காக மதுவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்க கூடியது.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X