என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமந்தா - நாகசைதன்யா வரவேற்பு நிகழ்ச்சி: நேரில் வாழ்த்திய சினிமா பிரபலங்கள்
Byமாலை மலர்13 Nov 2017 4:15 AM GMT (Updated: 13 Nov 2017 4:15 AM GMT)
ஐதராபாத்தில் நடைபெற்ற சமந்தா - நாகசைதன்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோவாவில் கடந்த அக்டோபர் 6, 7 தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் என 183 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சமந்தாவும் - நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். மேலும் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கி நண்பர்களுக்கு விருந்து அளித்தனர்.
இந்நிலையில், சமந்தா - சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன், நானீ, பிரபு, விக்ரம் பிரபு, வெங்கடேஷ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோவாவில் கடந்த அக்டோபர் 6, 7 தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் என 183 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சமந்தாவும் - நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். மேலும் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கி நண்பர்களுக்கு விருந்து அளித்தனர்.
இந்நிலையில், சமந்தா - சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன், நானீ, பிரபு, விக்ரம் பிரபு, வெங்கடேஷ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X