search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சாமி படத்தில் இருந்து மாமி விலகல்
    X

    சாமி படத்தில் இருந்து மாமி விலகல்

    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி’ படத்தில் இருந்து மாமியாக நடித்த திரிஷா, தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
    ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. இதில் விக்ரம், பாபி சிம்ஹா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தற்போது விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து திரிஷா விலகி உள்ளார்.

    தன் கேரக்டரில் வலுவில்லை என்ற காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக திரிஷா கூறியுள்ளார். மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார் திரிஷா.

    சாமி படத்தின் இரண்டாம் பாகம் ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
    Next Story
    ×