என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஆதரவு திரட்டும் ரசிகர்கள்
Byமாலை மலர்7 Sep 2017 8:00 AM GMT (Updated: 7 Sep 2017 8:00 AM GMT)
நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் துபாய் ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் மறுத்ததால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆலுவா ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திலீப்பின் தந்தை நினைவு நாளையொட்டி நேற்று அவருக்கு 2 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தந்தையின் நினைவு நாள் சடங்குகளில் திலீப் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் மீண்டும் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திலீப் கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாக சிலர் மட்டுமே கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானவர்கள் மவுனம் சாதித்து விட்டனர். அவரது ரசிகர்களும் திலீப்புக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை.
இதற்கிடையில் தற்போது திலீப்புக்கு ஆதரவாக அவரது துபாய் ரசிகர்கள் செயல்பட தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதில் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவரை முடக்க சதி நடந்து உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் திலீப் கைது வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் அதன் பின்னணியில் உள்ள சதி பற்றி வெளிவரும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திலீப் கைது பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி ஜனாதிபதி, பிரதமருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திலீப் ரசிகர்கள் இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திலீப்பின் தந்தை நினைவு நாளையொட்டி நேற்று அவருக்கு 2 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தந்தையின் நினைவு நாள் சடங்குகளில் திலீப் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் மீண்டும் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திலீப் கைது செய்யப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாக சிலர் மட்டுமே கருத்து தெரிவித்தனர். பெரும்பாலானவர்கள் மவுனம் சாதித்து விட்டனர். அவரது ரசிகர்களும் திலீப்புக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கவில்லை.
இதற்கிடையில் தற்போது திலீப்புக்கு ஆதரவாக அவரது துபாய் ரசிகர்கள் செயல்பட தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் வாட்ஸ் அப் குரூப் தொடங்கி உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதில் தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவரை முடக்க சதி நடந்து உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் திலீப் கைது வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் அதன் பின்னணியில் உள்ள சதி பற்றி வெளிவரும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திலீப் கைது பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி ஜனாதிபதி, பிரதமருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திலீப் ரசிகர்கள் இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
திலீப் ஜாமீன் நடிகை கடத்தல் வழக்கு மஞ்சு வாரியார் திலீப் பாவனா பாவனா கடத்தல் வழக்கு காவ்யா மாதவன் நடிகை கடத்தல் நடிகை பாலியல் தொல்லை Manju Warrier Dileep Bhavana Bhavana Abduction case Kavya Madhavan Actress abduction Actress Harassment harrasement Obsession actress abduction case dileep bail plea dileep mother Dileep Bail Plea Dileep custody dileep bail dismissed
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X