என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி : தான்யா
Byமாலை மலர்6 Sep 2017 12:11 PM GMT (Updated: 6 Sep 2017 12:11 PM GMT)
கருப்பன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி என்று படத்தின் கதாநாயகி தான்யா கூறியிருக்கிறார்.
சசிகுமார் நடித்த ‘பலே வெள்ளையத் தேவா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான்யா. அடுத்து அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான இவர் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள படம் ‘கருப்பன்’. விரைவில் திரைக்கு வர தயாராகும் இதில் நடித்தது பற்றி கூறிய தான்யா....
“இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன்.
இந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன். ‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.
நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். மதுரை தமிழை தெளிவாக பேச முடிய வில்லை. ஆகவே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் இதில் எனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இதில் முழுமையான மதுரை பெண்ணாக வருவது, எனது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. முதல் இரண்டு படங்களை விட இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடிப்பேன்” என்றார்.
“இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன்.
இந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன். ‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.
நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். மதுரை தமிழை தெளிவாக பேச முடிய வில்லை. ஆகவே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் இதில் எனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இதில் முழுமையான மதுரை பெண்ணாக வருவது, எனது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. முதல் இரண்டு படங்களை விட இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடிப்பேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X