என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தலைமறைவான காவ்யா மாதவனை தேடும் போலீஸ்
Byமாலை மலர்13 July 2017 6:54 AM GMT (Updated: 13 July 2017 6:54 AM GMT)
தலைமறைவான காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
காவ்யா மாதவன் 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். காசி, என்மன வானில், சாதுமிரண்டா ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன் கணவருடன் குவைத்தில் குடியேறினார்.
ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கேரளா திரும்பினார். இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் திலீப்பை காவ்யா மாதவன் கடந்த வருடம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார். தற்போது பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புடன் காவ்யா மாதவனும் சிக்கி இருக்கிறார்.
பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து எடுத்த வீடியோவை காவ்யா மாதவனின் கடை ஊழியரிடம் கொடுத்து விட்டதாக இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பல்சர் சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். காவ்யா மாதவன் கடையில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கியதாகவும் கூறி இருக்கிறார். இந்த வாக்குமூலம் காவ்யா மாதவனை வழக்கில் சிக்க வைத்து இருக்கிறது.
கடத்தலுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவி உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தையும் அவர் மூடி விட்டார். காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கேரளா திரும்பினார். இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் திலீப்பை காவ்யா மாதவன் கடந்த வருடம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார். தற்போது பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புடன் காவ்யா மாதவனும் சிக்கி இருக்கிறார்.
பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து எடுத்த வீடியோவை காவ்யா மாதவனின் கடை ஊழியரிடம் கொடுத்து விட்டதாக இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பல்சர் சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். காவ்யா மாதவன் கடையில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கியதாகவும் கூறி இருக்கிறார். இந்த வாக்குமூலம் காவ்யா மாதவனை வழக்கில் சிக்க வைத்து இருக்கிறது.
கடத்தலுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவி உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தையும் அவர் மூடி விட்டார். காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X