என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தமிழகத்தில் பாகுபலிக்கு அடுத்த இடத்தை பிடித்த மோகன்லாலின் புலிமுருகன்
Byமாலை மலர்13 Jun 2017 5:29 AM GMT (Updated: 13 Jun 2017 5:29 AM GMT)
மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘புலிமுருகன்’ படம் தமிழகத்தில் ‘பாகுபலி’க்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகி ரூ.150 கோடி வரை வசூல் சாதனை செய்த படம் ‘புலிமுருகன்’. மோகன்லால் நடிப்பில் இந்த படம் மோகன்லாலில் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமாக அமைந்தது. இந்த படத்தை அதே பெயரில் தமிழில் 30 தொழில்நுட்பத்தில் உருவாக்கி வெளியிடவுள்ளனர்.
மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் என்பவர் தயாரித்திருந்தார். இவரே இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார். இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகி இருந்தது.
இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார் தற்போது தமிழில் ஆர்.பி.பாலா என்பவர் கதை, வசனம் எழுதியுள்ளார். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வருகிற 16-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது ‘புலிமுருகன்’ என்பதே குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.
மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படத்தை முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் என்பவர் தயாரித்திருந்தார். இவரே இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார். இப்படத்தில் கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, லால், கிஷோர், நமீதா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாக இது உருவாகி இருந்தது.
இப்படத்தை வைஷாக் என்பவர் இயக்கியிருந்தார் தற்போது தமிழில் ஆர்.பி.பாலா என்பவர் கதை, வசனம் எழுதியுள்ளார். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் வருகிற 16-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது ‘புலிமுருகன்’ என்பதே குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X