search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vizag"

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் உணவு சாப்பிட சென்றனர். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர் - ரசிகைகளும் உணவு மற்றும் குளிர்பானம் அருந்துவதற்கு சென்றனர்.

    ஆனால் இங்கிலாந்து ரசிகர் - ரசிகைகள் ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

    ×