என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரி விடுதலை
Byமாலை மலர்29 April 2017 5:48 AM GMT (Updated: 29 April 2017 5:48 AM GMT)
கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரியை விடுதலை செய்து மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி திரைப்பட பாடகர் அங்கீத் திவாரி. இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு மே 8-ந்தேதி 28 வயது பெண் ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதில், பாடகர் தன்னை பிறந்தநாள் விருந்திற்கு அழைத்து மது கொடுத்து கற்பழித்ததாக கூறியிருந்தார்.
மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அங்கீத் திவாரியின் சகோதரர் அங்குர் திவாரி தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாடகர் அங்கீத் திவாரி மற்றும் அவரது சகோதரர் அங்குர் திவாரியை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது பாடகருக்கு எதிராக யாரும் வந்து சாட்சி கூறவில்லை.
இதனையடுத்து பாடகர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.எஸ். ராஷ்வி, பாடகர் அங்கீத் திவாரி அவரது சகோதரர் அங்குர் திவாரியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என அங்கீத் திவாரியின் சகோதரர் அங்குர் திவாரி தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாடகர் அங்கீத் திவாரி மற்றும் அவரது சகோதரர் அங்குர் திவாரியை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை பெண்கள் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது பாடகருக்கு எதிராக யாரும் வந்து சாட்சி கூறவில்லை.
இதனையடுத்து பாடகர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.எஸ். ராஷ்வி, பாடகர் அங்கீத் திவாரி அவரது சகோதரர் அங்குர் திவாரியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X