search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி"

    • மாணவிகள் அத்தப்பூ கோலம் போட்டு குத்துவிளக்கு ஏற்றி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.
    • முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாடப்பட்டது .கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் கல்லூரி செயலாளர் சுமதி கிருஷ்ண பிரசாத், கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குனர் ஜெ.மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலம் போட்டு அதில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நடனமாடி மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர். இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு ஓண திருவிழாவை கொண்டாடினர். இதற்கான ஆலோசனை மற்றும் பணிகளை கல்லூரி பேரவை ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை இணை பேராசிரியருமான டி.வி. பானுமதி மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் சுமதி, பேரவை உறுப்பினர்களும் செய்து இருந்தனர். கல்லூரி பேரவை மாணவ தலைவர், எம் தர்ஷினி , செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் விழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×