search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ திரௌபதி அம்மன்"

    • காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இத்திருகோவிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி வெள்ளிக்கிழமை கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்றிலிருந்து நாள்தோறும் பல்வேறு வகையான பூஜைகள்,கரகம் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, கூழ் ஊற்றும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.நேற்று மாலை ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள முனுசாமி தாத்தா கோவில் அருகே காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், பூக்களாலும்,மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது.இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இதன் பின்னர், மங்கள வாத்தியம் இசைக்க பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆத்துப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்துப்பாக்கம் கிராம பொதுமக்களும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×