search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பல்நோக்கு மையம்"

    • இந்த மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    • காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை.

    அரவேணு,

    தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி செலவில் கோத்தகிரி அருகே எஸ்கைகாட்டி, கஸ்தூரிபா நகர் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய வேளாண் பல்நோக்கு மையம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

    இந்த மையத்தில் மலை காய்கறிகளை கழுவும் நவீன எந்திரம், காய்கறிகளை உலர்த்தும் எந்திரம், காய்கறிகளை பாதுகாப்பாக வைக்கும் குளிர்பதனகிடங்கு, காய்கறி ஏல விற்பனை மையம், காய்கறிகளை தரம் பிரிக்கும் மையம், ஜென ரேட்டர் வசதி, வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ப்பட்டன. கோத்தகிரி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை பல்நோக்கு மைய த்திற்கு கொண்டு சென்று கழுவி, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விற்பனை செய்து வந்தனர்.

    இந்த பல்நோக்கு மையத்தை சமவெளி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், 3 ஆண்டுக்கு செயல்படுத்த ரூ.6 லட்சத்தை வேளாண் வணிகத்துறைக்கு செலுத்த ஒப்பந்தம் போட்டு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பல்நோக்கு மையத்தில் காய்கறிகளை கழுவும் தண்ணீரை சுத்தப்படுத்தி வெளியேற்ற எந்தவித வசதியும் செய்யப்படவில்லை. இதனால் அழுக்கு தண்ணீர் தாழ்வான பகுதியில் செல்லும் ஆற்றில் நேரடியாக கலந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பல்நோக்கு மையத்தில் இருந்து வெளியேறும் அசுத்தமான தண்ணீரை ஆற்றில் கலக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் இந்த மையத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயி கடந்த 3 மாதங்களாக வேளாண் வணிகத்துறைக்கு வாடகை செலுத்தாமல் பூட்டி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த காய்கறி களை கழுவுவதற்கு பல கி.மீ. தொலைவில் உள்ள கூக்கல்தொரை கிராம த்திற்கு சரக்கு வாகனங்க ளில் கொண்டு சென்று தனியார் காய்கறி கழுவும் மையங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி கழுவி விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, வேளாண் பல்நோக்கு மையத்தை மீண்டும் திறக்கவும், காய்கறி கழுவும் தண்ணீர் பல கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்று நீரில் கலக்காமல் இருக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×