search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் அதிகாரி தகவல்"

    • அங்கக வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கீழக்கரை

    விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி–யதால் மண்ணின் இயற்கை வளம் குறைந்து மண்ணில் வாழும் நுண்ணு–யிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல் பாடு மிகவும் குறைந்தது. மண் வளத்தை பெருக்க பயிர்ச் சுழற்சி முறை ஒருங் கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர் களை பயிரிடுதல் பயிர் கழி–வுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண் புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண் ணெய் வித்துகளின் புண் ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரி தெரி–வித்துள்ளார். வயல் வரப்புகள் தரிசு நிலங்கள் சாலையோரங்கள் மற்றும் காடுகள் வளரும் வாகை, புங்கம், வேம்பு, மயில் கொன்றை மரங்களின் இலைகள் மரத்தின் சிறு குச்சி கொம்புகள் ஆகிய பசுந்தளை உரங்களை நிலத்தில் இடுவதால் மண்ணின் இயற்பியல் குணங்கள் மேம்படும். உயிர் உரங்கள் மண்ணில் இடப்படும் அனைத்து இடுபொருட்களும் சிதை–வுற்று அங்கக மூலங்களாக மாற் றம் பெறுவதற்கு கோடிக்க–ணக்கான நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றை மண்ணில் இடும் பொழுது மண்ணில் அதன் எண்ணிக்கையை அதிகப்ப–டுத்துவதோடு பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக் களையும் மேம்படுத்தி பயிர்களுக்கு ஊட்டமளிக்கிறது.

    பயிர்களில் அதிக விளைச் சலைப் பெற மண் ணில் பெற மண்ணில் போதுமான அளவில் கிட் டும் நிலையில் உயிர்ச்சத்து–களை நிலை நிறுத்துவ–தற் கும் மண்ணின் இயற்பி–யல் குணங்களை மேம்படுத்து–வதற்கும் மண்வாழ் உயிரி–னங்களின் மகத்தான செயல்பாட்டிற்கும் அடிகோ–லும் அங்கக பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து வளங்குன்றா அங்கக வேளாண்முறையை பின்பற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முன் வரவேண்டும் என்று ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண் டுள்ளார்.

    ×