search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கக வேளாண்மை"

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து 750 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அங்கக வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கீழக்கரை

    விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி–யதால் மண்ணின் இயற்கை வளம் குறைந்து மண்ணில் வாழும் நுண்ணு–யிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல் பாடு மிகவும் குறைந்தது. மண் வளத்தை பெருக்க பயிர்ச் சுழற்சி முறை ஒருங் கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர் களை பயிரிடுதல் பயிர் கழி–வுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண் புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண் ணெய் வித்துகளின் புண் ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரி தெரி–வித்துள்ளார். வயல் வரப்புகள் தரிசு நிலங்கள் சாலையோரங்கள் மற்றும் காடுகள் வளரும் வாகை, புங்கம், வேம்பு, மயில் கொன்றை மரங்களின் இலைகள் மரத்தின் சிறு குச்சி கொம்புகள் ஆகிய பசுந்தளை உரங்களை நிலத்தில் இடுவதால் மண்ணின் இயற்பியல் குணங்கள் மேம்படும். உயிர் உரங்கள் மண்ணில் இடப்படும் அனைத்து இடுபொருட்களும் சிதை–வுற்று அங்கக மூலங்களாக மாற் றம் பெறுவதற்கு கோடிக்க–ணக்கான நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றை மண்ணில் இடும் பொழுது மண்ணில் அதன் எண்ணிக்கையை அதிகப்ப–டுத்துவதோடு பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக் களையும் மேம்படுத்தி பயிர்களுக்கு ஊட்டமளிக்கிறது.

    பயிர்களில் அதிக விளைச் சலைப் பெற மண் ணில் பெற மண்ணில் போதுமான அளவில் கிட் டும் நிலையில் உயிர்ச்சத்து–களை நிலை நிறுத்துவ–தற் கும் மண்ணின் இயற்பி–யல் குணங்களை மேம்படுத்து–வதற்கும் மண்வாழ் உயிரி–னங்களின் மகத்தான செயல்பாட்டிற்கும் அடிகோ–லும் அங்கக பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து வளங்குன்றா அங்கக வேளாண்முறையை பின்பற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முன் வரவேண்டும் என்று ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண் டுள்ளார்.

    • அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை விளக்கப்பட்டது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்பாடு விளக்கப்பட்டது.

     காங்கயம்:

    காங்கயம் வட்டாரத்தில் 2023-ம் ஆண்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் குழு கண்டறியப்பட்டு அக்குழுவில் உள்ள 25 விவசாயிகளுக்கு காங்கயம் அருகே காடையூர் பகுதியில் முதல் கட்ட பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் நடத்தப்பட்டது.

    இந்த பயிற்சியில் அங்ககச் சான்று ஆய்வாளர் ஹேமா கலந்துகொண்டு அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் அரசப்பன் கோடை உழவு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அங்கக வேளாண்மையில் இவற்றின் பங்கு ஆகியவை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி பரம்பரகத் க்ரிசி விகாஷ் யோஜனா திட்டம் (பி.கே.வி.வை) பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் ரேவதி பாசன நீர் மாதிரி எடுத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்கள் பற்றி கூறினார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேவராஜ், வசந்த் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×