search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலிகளை சேதப்படுத்திய கும்பல்"

    • ரூ.1 லட்சம் மதிப்புள்ள கல் மற்றும் கம்பி வேலிகளை உடைத்து சேதப்படுத்திய கும்பல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது..
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி சாலை பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது64). இவருக்கு சொந்தமான 16 செண்ட் காலி இடத்தில் கல் மற்றும் வேலி அமைத்து பராமரித்து வருகிறார்.

    இந்த நிலையில் சக்கரைப்பட்டியை சேர்ந்த குபேரந்திரன், பொன்மணி, அய்யர், கருப்பாயியம்மாள், பேச்சியம்மாள், வனராஜா ஆகியோர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், வேலியை அகற்றுமாறும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் காலி இடத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கல் மற்றும் கம்பி வேலிகளை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×