search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வே"

    • கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது
    • 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எடைத்தெரு கிராமத்தில் 72-ம் ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலா கலமாக கொண்டாட ப்பட்டது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு களான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.

    பின்னர் வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

    விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வேணுகோபால், தனஞ்செயன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை ெதாடர்ந்து போடிப்பேட்டை எல்லப்பன்பட்டி, அகரம் , அகரராஜாபாளையம், மகமதுபுரம், கரடிகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    ×