search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளி மாநில மது"

    • மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் வீட்டில் வைத்து விற்கப்பட்டது.
    • இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு, வீட்டிற்குள் மறைத்து வைத்து வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த, மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி மோகனாம்பாள் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே போலீசாரை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 110 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×