search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளி நடப்பு"

    • தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொது–மக்கள் அடிப்படை வசதிகளுக்குரிய தேவை–யான பணி செய்ய பொது நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை.
    • அதிகாரிகள் எவரும் ஒன்றிய குழு கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது

    கரூர்,

    குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக்கூட்டம் மன்றத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லதாரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஒன்றிய குழு துணை தலைவர் பாப்பாத்தி சின்னவழியான் மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருளாக 22 தீர்மானங்கள்வாசிக்கப்பட்டது, தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றக்கூடாது என்று ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணைதலைவர் உட்பட 13 ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றக்கூடாது, என்றும்

    தொடர்ந்து தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கு, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்குரிய தேவையான பணி செய்ய பொது நிதி ஒதுக்கீடு செய்யாததாலும், 15 வது நிதி குழு மானியம் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி வைக்காததாலும், முக்கிய அதிகாரிகள் எவரும் ஒன்றிய குழு கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அனைத்து மன்ற பொருள் தீர்மானங்களையும் நிறைவேற்றாமல் வெளியில் சென்றனர்,

    கரூர் மாவட்ட பகுதியில் ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளியில் வந்தது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×