search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீணாகி வரும் தண்ணீர்"

    • தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.
    • தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழனி சாலை கணபதி அக்ரஹாரம் பகுதியில் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பகுதிகளுக்கு வழங்கப்படு கிறது. இதில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு முழுவதிற்கும் 7 மற்றும் 12 வது வார்டு பகுதியில் ஒரு சில பகுதி களுக்கும் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்பெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று காலை மின் மோட்டார் மூலம் மேல்நிலைத் தொட்டி யில் தண்ணீர் ஏற்றப்பட்டது. தண்ணீர் தொட்டி நிறைந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் கீழே கொட்டியது. 40 அடி உயரத்தில் அருவி போல் விழுந்த தண்ணீரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

    இந்த தொட்டியில் பொரு த்தப்பட்டுள்ள வால்வு கோளாறு காரண மாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக வார்டு பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று தண்ணீர் ஏற்றப்பட்டது. தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.

    தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் பொது மக்களிடம் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் இதுபோல் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×