search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டில் புகுந்த"

    • வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஒரிச்சேரி சக்தி மெயின் ரோட்டில் செல்லவேல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    நேற்று இவரின் வீட்டினுள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை வெளியேற்ற அவர் பல்வேறு முயற்சிகள் செய்தும் முடியவில்லை.

    இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து பவானி நிலைய அலுவலர் பழனிச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று செல்லவேல் வீட்டில் இருந்த மூன்றடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டுள்ளனர்.

    ×