search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீசி"

    • நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் கிணற்றில் கடந்த 14-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த எருமைப்பட்டி போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன், ராஜு, முத்துகிருஷ்ணன். இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது.

    இந்த கிணற்றில் கடந்த 14-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் மிதந்தது. இது குறித்து எருமைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எருமைப்பட்டி போலீசார், நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிறந்து 3 நாட்களே ஆன இந்த குழந்தையை, கிணற்றில் வீசிக் கொன்றது யார்? என்பது தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் சமீபத்தில் குழந்தை பிறந்த நபர்கள் குறித்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×