என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிக்கு அரிவாள் வெட்டு"
- சூரிய பிரகாஷ் தனது அடியாட்களுடன் மூங்கில் முடிவு பேருந்து நிலையத்தில் உள்ள, கடையில் அமர்ந்திருந்த பெருமாளை, சரமாரியாக வெட்டி உள்ளார்.
- கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது45). விவசாயி. வெற்றிலை தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் இவருடைய அக்கா மகன் சூரிய பிரகாஷ் (வயது 30). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் விவசாய நிலத்தில், விவசாயம் செய்ய சூரிய பிரகாசின் தாய் வந்ததாகவும், அப்போது அதனை பெருமாள் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 9-ம் தேதி சூரிய பிரகாஷ் தனது அடியாட்களுடன் மூங்கில் முடிவு பேருந்து நிலையத்தில் உள்ள, கடையில் அமர்ந்திருந்த பெருமாளை, சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் பெருமாளின் கைத்துண்டானது. கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல், கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் காரில் தப்பிச் சென்றது.
இதனை அடுத்து, படுகாயம் அடைந்த பெருமாளை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் வாகன பதிவு எண் உதவியுடன் தீவிரமாக தேடினர். இந்நிலையில் கர்நாடகாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட மூன்று நபர்களை பாலக்கோடு பகுதியில் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஜாகிர்வெங்கடாபுரத்தை சேர்ந்த மணிகுமார் மகன் சச்சின், கூர்க்காம்பட்டியை சேர்ந்த சிவமணியின் மகன் பாலமுரளி ஆகிய இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
- விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்புராணி மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (வயது 30), விவசாயி. இவர் தனது நண்பரான சிவா (31) உள்ளிட்ட 5 பேருடன் அங்குள்ள அன்னதான கொட்டகை கீழே கல்தளம் அமைப்பதா? அல்லது சிமெண்டு தளம் போடுவதா? என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவாவை வெட்ட முயன்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அய்யாவு அவர்களை தடுத்து உள்ளார். இதில் அய்யாவு கையில் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து சங்கர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யாவுவை அருகே இருந்தவர்கள் மீட்டு கே.புதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்."
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்