search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு உபகரணங்கள்"

    • ஆத்மா திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்
    • விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் சயனபுரம் கிராமத்தில் நெல் வயல் விழா நடத்தப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார்.

    நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி அருணா குமாரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேல் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப பதாகைகளை ஏந்தி தொழில்நுட்ப விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    விழாவில் 50 விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து 30 விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் 10 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் 20 விவசாயிகளுக்கு இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சிவராஜ் கலந்து கொண்டார்.

    முடிவில் வேளாண்மை துணை அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் புண்ணியராஜ், செந்தில், ஆத்மா திட்ட அலுவலர்கள் நிர்மலா தேவி ராஜேந்திரன் ராமதாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தார்பாலின் உள்ளிட்டவை அடங்கிய பொருட்கள் 50 சதவீத மாணியத்தில் விவசாயி களுக்காக வழங்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் மூலம் பாகலஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப்பாரை பாண்டில், அரிவாள் மற்றும் தார்பாலின் உள்ளிட்டவை அடங்கிய பொருட்கள் 50 சதவீத மாணியத்தில் விவசாயி களுக்காக வழங்கப்பட்டது.

    மேலும் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்க ன்றுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளையும், தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், வளர்மதி தமிழ்ச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண்மை அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    ×