என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விவசாயி கழுத்து அறுத்து கொலை
நீங்கள் தேடியது "விவசாயி கழுத்து அறுத்து கொலை"
பூதலூர் அருகே இடம் வாங்கும் பிரச்சினையில் விவசாயியை கழுத்து அறுத்து கொலை செய்த மளிகைக்கடைக்காரரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள இளங்காடு மேலத்தெருவை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன்(வயது42). விவசாயி. இவர் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு இளங்காட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிள்ளைவாய்க்கால் பாலத்தின் அருகே மணிவண்ணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து மணிவண்ணன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மணி வண்ணனை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மளிகை கடைக்காரர் மோகனவேலு (29) என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. மணிவண்ணனுக்கும், மோகனவேலுக்கும் இடையே அப்பகுதியில் ஒரு இடம் வாங்குவது சம்பந்தமாக போட்டி இருந்து வந்தது. இதில் மணிவண்ணன், அந்த இடத்தை அதிக விலை கொடுத்து வாங்கி விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மோகனவேலு, தனது அக்காள் மகன் பருத்திக் கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை கழுத்து அறுத்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த மோகனவேலு, மளிகை கடையை பூட்டி விட்டு தலை மறைவாகி விட்டார். இதனால் தலைமறைவான மோகன வேலு, மற்றும் வாலிபர் அரவிந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X