search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய தோட்டத்தில் புகுந்து"

    • காட்டு யானை வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.
    • யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை கிராம வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று சஞ்சீவராயன் குளம் அருகே மணி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

    சுமார் 1½ ஏக்கரில் கரும்பு விளைவித்து இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

    வாழை மரங்களை யானை சேதப்படுத்துவதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்த மிட்டவாறும் யானையை வனபகுதிக்குள் விரட்டி யதாக கூறப்படுகிறது.

    அப்போது யானை வனப்பகுதியை யொட்டிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் வனப்பகு திக்குள் சென்று மறைந்தது.

    அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அந்தியூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அந்தியூர் வனத்துறையினர் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×