என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வை"
- அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் 2016-ம் ஆண்டு முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகும்.
- வருகிற செப்டம்பர் 17-ந் தேதி இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி:
அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடை பெற்ற முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் அமைந்தது.
இந்த நிலையில் அமைப்பின் 58-வது ஆண்டு விழா, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா மற்றும் பெரியாரின் பிறந்தநாள் விழாஆகியவை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 250 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் மாநில தலைவரும் ரத்ததான முகாம் ஒருங்கிணை ப்பாளருமான வக்கீல் முகேஷ் குமார் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 2பேர் ரத்ததானம் வழங்கி ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்